சஞ்சய்தத்தை அடுத்து மேலும் இரண்டு பிரபலங்கள்: எதிர்பார்ப்பை அதிகரிக்கும் 'தளபதி 67'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தளபதி 67’ படத்தின் ஒவ்வொரு தகவலும் அந்த படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இருவருமே வில்லன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 3வது வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரம் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த ஆண்டு ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது ’வாரிசு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.