விவசாயிகள் போராட்டம்: நடிகை ரிஹானாவை அடுத்து மேலும் ஒரு நடிகை ஆதரவு!

  • IndiaGlitz, [Wednesday,February 03 2021]

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி கொண்டே வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான ரிஹானே தனது டுவிட்டரில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் என்பதைப் பார்த்தோம்

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகையை தொடர்ந்து ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை மியா கலிபாவும் தனது ஆதரவை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் ’டெல்லியில் என்ன மாதிரியான மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டு வருகின்றன? போராட்டக்களத்தில் இணையசேவை துண்டித்து விட்டார்களாமே? என தெரிவித்துள்ளார்

மேலும் விவசாயிகள் பணத்துக்காக நடிப்பவர்களா? அப்படி என்றால் விருது வழங்கும் விழாவில் அவர்களின் பெயர்களை பரிசீலிக்கலாமே? என்றும் நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

விவசாயிகள் போராட்டத்திற்கு இந்தியாவில் உள்ள பெரிய நடிகர்-நடிகைகள் யாரும் ஆதரவு தராத நிலையில் வெளிநாட்டிலுள்ள நடிகர்-நடிகைகள் ஆதரவு தந்து கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

வேலையை ராஜினாமா செய்த உலகின் இராண்டாவது பெரிய பணக்காரர்!

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி எனப் பல பதவிகளை வகித்து வரும் ஜெஃப் பெசோஸ் தன்னுடைய சிஇஓ பதவியில் இருந்து விலக உள்ளார்

'மாஸ்டர்' திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தது இத்தனை மில்லியன் பேரா? ஆச்சரிய தகவல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த திரைப்படம் இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது

27 வயதில் 20 கின்னஸ் ரெக்கார்ட்… பாப் இளவரசியின் தடாலடி அசத்தல்!

பாப் இசை உலகில் சமீபகாலமாக கொடிகட்டிப் பறந்து வரும் பாடகி Ariana Grande. அமெரிக்காவை சேர்ந்த இவர் பாடுவதில் மட்டுமல்ல சிறந்த நடிப்புக்காகவும் சிறந்த வடிவமைப்புக்காகவும் பெயர் பெற்றவர்.

சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

பாலாஜி தந்தை மறைவுக்கு ஆரியின் செயல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரன்னர் பாலாஜியின் தந்தை நேற்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த தகவல் அறிந்த பாலாஜியின் ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட