ஓய்வுக்கு பின் 'தல' தோனி செய்யும் வேலையை பாருங்கள்!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் மாறி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அதேபோல் ஒரு சிலர் அரசியல் கட்சிகளில் இணைந்து எம்பிக்கள் எம்எல்ஏக்கள் ஆகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி அவர்கள் கிரிக்கெட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அவர் சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார் என்பதும் அவரது நிலத்தில் விளைந்த விளை பொருள்கள் அரபு நாடுகள் உள்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகி வருகிறது என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் தனது விவசாய பண்ணையில் பணி புரியும் விவசாய தொழிலாளர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது

அதேபோல் தல தோனி கவனம் செலுத்தும் இன்னொரு விஷயம் கால்பந்து ஆகும். கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டும் தோனி ’ஆல் ஸ்டார் ஃபுட்பால் கிளப்’ அணியுடன் விளையாடும் காட்சிகளின் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது. மொத்தத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தனிப் பாதையில் பயணம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது: கமல்ஹாசன்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியா முழுவதும் உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் ரூ.90க்கு மேலும், வட மாநிலங்களில் ரூ.100ஐயும் தாண்டி

காதல் மனைவியிடம் கிஃப்ட் கேட்ட முன்னணி நடிகர்? வைரலாகும் புகைப்படம்!

ரீலில் நடித்து ரியல் ஜோடியாக மாறிய ஆர்யா-சாயிஷா தற்போது நட்சத்திரத் தம்பதிகளாக உலா வருகின்றனர்.

பிக்பாஸ் சுஜாவின் காதலர் தின ரொமான்ஸ் புகைப்படம் வைரல்!

நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கோலிவுட் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளும், காதலர்களும் காதலர் தினத்தை கொண்டாடி வந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

கவலைப்பட வேண்டாம்: 'மாஸ்டர்' படம் பார்க்க ரசிகர்களுக்கு இயக்குனர் தந்த உறுதிமொழி!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பதும் ரூபாய் 250 கோடிக்கு மேல் திரையரங்கிலும்

இதுக்கும் பிட்ச்தான் காரணமா?  பிரஸ்மீட்டில் பொங்கிய இந்திய வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் அதிரடி காட்டி வருகின்றனர்.