ரஜினியை அடுத்து மும்பை செல்கிறார் கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,February 26 2018]

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மும்பை சென்றார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். ரஜினியை தொடர்ந்து பல கோலிவுட் நட்சத்திரங்கள் மறைந்த மாபெரும் மேதை நடிகையின் முகத்தை கடைசியாக பார்க்க மும்பை சென்று கொண்டிருக்கின்றனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர், அஜித் மனைவி ஷாலினி, நடிகை ஹன்சிகா உள்பட பலர் மும்பை சென்றுள்ள நிலையில் சற்றுமுன் நடிகர் கமல்ஹாசன் அவர்களும் மும்பை செல்ல புறப்பட்டுள்ளார்.

மும்பை செல்லும் முன் விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல், ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதாக கூறினார். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை என அரசியல் கட்சி தொடங்கும் நாளில் கூறிய கமல், ஸ்ரீதேவியை பார்க்க செல்வது குறித்து செய்தியாளர்கள் கமலிடம் கேட்டபோது, 'இறுதி ஊர்வலத்தில் தான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியதாகவும், தற்போது அஞ்சலி செலுத்த மட்டுமே செல்வதாகவும் கூறிய கமல், ஆர்.சி. சக்தி, போன்றவர்கள் எனது குடும்பத்தில் ஒருவரை போன்றவர்கள் என்றும், அதனால் ஒருசிலருடைய இறுதி ஊர்வலத்தில் மட்டும் கலந்து கொண்டதாகவும் கமல் தெரிவித்தார்.

More News

சிரியாவில் கொத்து கொத்தாக பலியாகும் சின்னஞ்சிறு சிறார்கள்

சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா உள்பட பல நாடுகள் முயற்சி செய்தும் முடியவில்லை

ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஸ்ரீதேவி!

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே சிறந்த திரை ஜோடியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.

அஜித் குடும்பத்தை உலுக்கிவிட்ட ஸ்ரீதேவி மரணம்

அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவியின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகை உலுக்கிவிட்டது. ஸ்ரீதேவியின் மறைவிற்கு கமல், ரஜினி மட்டுமின்றி இன்னொரு ஸ்டார் குடும்பத்தையும் உலுக்கிவிட்டதாம்.

தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். 'கரு' நாயகி

சாய்பல்லவியின் முதல் தமிழ்ப்படமான 'கரு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர்

ஸ்ரீதேவி உடல் வருகை தாமதம்! என்ன நடக்கின்றது துபாயில் ?

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ள நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர்களும், இந்திய தூதரகமும் தீவிர முயற்சி செய்து வருகிறது.