நாகார்ஜூனாவை அடுத்து 'கூலி'யில் இணையும் இன்னொரு பிரபலம்.. ரூ.1000 கோடி உறுதியா?

  • IndiaGlitz, [Wednesday,September 11 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கூலி’ திரைப்படத்தில் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த அளவில் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை வைத்துள்ள பாலிவுட் பிரபலம் இந்த படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவதை அடுத்து இந்த செய்தி மட்டும் உண்மையானால் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கூலி ’படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உட்பட சில பிரபலங்கள் இணைந்துள்ளனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் அமீர்கான் இணைய இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அமீர்கான் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை வாரி குவித்து உள்ள நிலையில் ரஜினியுடன் இணையும் படம் என்பதால் இந்த படம் சாதனை செய்யும் அளவுக்கு வசூல் இருக்கும் என்றும் குறிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இந்த படம் எளிதில் நெருங்கி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஓடிடியில் வெளியாகிறது 'வாழை' திரைப்படம்.. எந்த ஓடிடி? என்ன தேதி?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'வாழை' திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி

'கோட்' படத்தை மிஸ் செய்த நயன்தாரா.. எந்த கேரக்டர் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருந்ததாகவும்

நடிகர் ஜீவா குடும்பத்துடன் சென்ற கார் விபத்து.. என்ன ஆச்சு?

பிரபல தமிழ் நடிகர் ஜீவா தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்து உள்ளானதாக வெளியாகியிருக்கும் செய்தி

எத்தனை முறை திருமணம் நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்: தனுஷ், சிம்பு பட நடிகை..!

ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் எனக்கு பலமுறை திருமணம் நடத்தி வைத்து விட்டன என்றும் எத்தனை முறை எனக்கு திருமணம் நடத்தி வைத்தார்கள் என்பதை நானே மறந்து  விட்டேன்

பாடகர் மனோவின் இரு மகன்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு.. என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் பிரபல பாடகர் மனோவின் இரண்டு மகன்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.