close
Choose your channels

'மஞ்சும்மெல் பாய்ஸ்' போலவே இன்னொரு மலையாள படத்திற்கும் பிரச்சனை.. 'அழகிய லைலாவில்' என்ன நடந்தது?

Thursday, July 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் ’குணா’ படத்தில் இடம்பெற்ற ’கண்மணி அன்போடு காதலை’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளதை அடுத்து சில சர்ச்சையான நிகழ்வுகளும் நடந்தது என்பதை பார்த்தோம்.

குறிப்பாக இந்த பாடலை பயன்படுத்தியதற்கு என்னிடம் அனுமதி வாங்கவில்லை என இசைஞானி இளையராஜா ’மஞ்சும்மெல் பாய்ஸ்’ படக்குழுவினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழுவினர்களோ இந்த பாடலுக்கு உரிமையுள்ள நிறுவனத்திடம் அனுமதி வாங்கி தான் பயன்படுத்தினோம் என்று கூறிய நிலையில் இந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலை உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பிருத்விராஜ் நடித்த ’குருவாயூர் அம்பலநடையில்’ என்ற திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம்பெற்ற ’அழகிய லைலா’ என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலை கம்போஸ் செய்த இசையமைப்பாளர் சிற்பி சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த பாடலை பயன்படுத்த தன்னிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த பாடலுக்கு உரிமையுள்ள இசை நிறுவனத்திடம் படக்குழுவினர் அனுமதி வாங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தான் சட்ட ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்றும், பட குழுவினர்களிடமிருந்து பணமும் கேட்கப்போவதில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் என்னுடைய பெயரை கிரெடிட் ஆக போட்டால் மட்டும் போதும் என்றும் கூறினார். மேலும் இதுவரை நான் இந்த படத்தை பார்க்கவில்லை, இனிமேல் படம் பார்த்து என்னுடைய பெயர் இல்லை என்றால் அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்’ என்றும் கூறியுள்ளார். இசையமைப்பாளர் சிற்பியின் என்ற பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.