close
Choose your channels

பலான இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. 'மகாராஜா' வெற்றிக்கு பின் அதிரடி முடிவு..!

Thursday, June 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்த ஐம்பதாவது திரைப்படமான ‘மகாராஜா’ மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து 100 கோடி என்ற மைல் கல்லை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும் இரண்டு படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது அவர் ‘மகாராஜா’ வெற்றிக்கு பிறகு திடீரென பலான இயக்குனருடன் இணைவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தரமான அதிரடி ஆக்சன் படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர் கிளாமருடன் கூடிய பலான படங்களை மட்டுமே இயக்கி வருவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ராமகோபால் வர்மா, விஜய் சேதுபதியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில் தற்போது இருவரும் இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் ராம்கோபால் வர்மா மூன்று மணி நேரம் கூறிய கதை விஜய் சேதுபதிக்கு பிடித்து விட்டதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த கதையை முதலில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ராம்கோபால் வர்மா கூறியதாகவும் ஆனால் அவரிடம் தேதி இல்லை என்பதால் தற்போது விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவான ’ஏஸ்’ என்ற திரைப்படத்திலும், மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’ட்ரெயின்’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள நிலையில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகும் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.