இந்த முறை சிறப்பு தோற்றத்தில் யாரும் கிடையாது: பிரபல ஹீரோவிடம் கதை கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

  • IndiaGlitz, [Tuesday,February 27 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த ’லால் சலாம்’ திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்த நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க பிரபல ஹீரோ ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி உள்பட யாரும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

’லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற நிலையில் அடுத்த படத்திற்கான பணியை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஒரு சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஒரு கதை எழுதியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அந்த கதையை நடிகர் சித்தார்த்திடம் கூறியிருப்பதாகவும் இருவரும் ஒரு படத்தில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா சொன்ன கதை சித்தார்த்துக்கு பிடித்து விட்டதாகவும் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று அவர் உறுதி கூறி இருப்பதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து ஒரு எம்பி.. பாரதிய ஜனதா கட்சியின் மாஸ் திட்டம்..!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளில் திரை உலகை சேர்ந்தவர்கள் இணைந்து வரும் காட்சியையும், அவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படு

என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை.. தயாரிப்பாளர் குறித்து அமீர்..!

டெல்லியில் ரூபாய் 2000 கோடி போதை மருந்து கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்த நிலையில் இந்த சம்பவத்திற்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கும் சம்பந்தம் உண்டு என்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக

வேற லெவலில் மாஸ் லுக்.. சிம்புவின் 'எஸ்டிஆர் 48' செம்ம வீடியோ..!

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'எஸ்டிஆர் 48' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளியை அடுத்து இன்னொரு நாயகி.. தனுஷ் வெளியிட்ட 'ராயன்' போஸ்டர்..!

தனுஷ் நடித்துள்ள 'ராயன்' திரைப்படத்தில் ஏற்கனவே துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் தற்போது இன்னொரு நாயகியும் நடித்துள்ளதாக சற்றுமுன் தனுஷ்

அஜித், சூர்யா பட தயாரிப்பாளர் திடீர் கைது.. திரையுலகில் பரபரப்பு..!

அஜித், சூர்யா உட்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.