கமல், விஷால் பாணியில் டிவிக்கு வரும் சூரி

  • IndiaGlitz, [Friday,September 28 2018]

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு மார்க்கெட் இழந்த நடிகர், நடிகைகள் மட்டுமே டிவிக்கு வருவார்கள். ஆனால் தற்போது சினிமாவை விட டிவியில் கிடைக்கும் புகழ் அதிகம் என்பதால் இதில் தோன்ற பல நடிகர், நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐம்பது வருடங்களாக சினிமாவில் கிடைத்த புகழை விட பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனக்கு அதிகளவு புகழ் கிடைத்ததாக கமல்ஹாசன் கூறியுள்ளதே இதற்கு சான்று. மேலும் விஷாலும் விரைவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான புரமோஷன் நடந்து வருகிறது

இந்த நிலையில் கமல், விஷாலை அடுத்து பிரபல காமெடி நடிகர் சூரி, டிவி தொடர் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'திருமணம்' என்ற டிவி தொடர் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடரில் நடைபெறும் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் செல்பி எடுத்து கொள்ளும் காட்சியில் சூரி நடித்துள்ளாராம்

'திருமணம்' டிவி தொடரின் இயக்குனர் இதுகுறித்து சூரியிடம் கூறியபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டதோடு, சொன்னபடி வந்து சிறப்பாக நடித்து கொடுத்ததாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் சித்து மற்றும் ஸ்ரேயா முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

More News

மொழி தெரியாத ஹீரோ என்பதால் எனக்கு வசதியாக இருந்தது: 'நோட்டா' இயக்குனர் ஆனந்த் சங்கர்

அர்ஜூன்ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா, சன்சனா, சத்யராஜ், நாசர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'நோட்டா' திரைப்படம் வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

சிம்புவின் அடுத்த பட நாயகி 'பிக்பாஸ்' ஐஸ்வர்யா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா கடந்த பல வாரங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியிருக்க வேண்டிய நிலையில்

ஹவுஸ்புல்லான அதிகாலை காட்சிகள்: மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்ட மணிரத்னம்

கோலிவுட் திரையுலகம் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்களின் வசம் சென்றுவிட்டது. இளம் இயக்குனர்களின் வித்தியாசமான படைப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீனியர் இயக்குனர் ஓய்வெடுக்க தொடங்கிவிட்டனர்.

நான் இருந்திருந்தால் ஒரு கொலையே பண்ணியிருப்பேன்: மகத்

பிக்பாஸ் வீட்டில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நால்வர் மட்டுமே இருப்பதால் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் கருதி தினமும் இரண்டு பேர் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருகின்றனர்.

கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திருமணத்திற்கு பின்னர் மனைவி வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்தால் அது கிரிமினல் குற்றமல்ல என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.