'கைதி'யை அடுத்து முடிவுக்கு வந்த கார்த்தியின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Saturday,July 06 2019]

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கைதி' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'கைதி' திரைப்படத்தை அடுத்து ஜோதிகாவுடன் கார்த்தி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 'பாபநாசம்' படம் புகழ் ஜித்து ஜோசப் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் அக்கா-தம்பியாகவும் இவர்களின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தொடங்கப்பட்டு வரும் அக்டோபரில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த ஆண்டுக்குள் கார்த்தியின் இரண்டு படங்கள் வெளியாவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கார்த்தி தற்போது இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'அறம் 2' படத்தின் நாயகி நயன்தாராவா? சமந்தாவா?

இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கம்பீரமான கலெக்டர் வேடத்தில் நடித்த நயன்தாராவுக்கு பாராட்டுக்கள்

சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த இரட்டையர்கள்

சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த ஒருசில நாட்களிலேயே ரொமான்ஸ், சண்டை சச்சரவு என விறுவிறுப்பை தொடங்கிவிட்டது.

மகள் பாசத்தால் அழுத சாண்டி: முன்னாள் மனைவியும் கண்ணீர்

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ஜாலியாக இருக்கும் ஒரே நபர் என்றால் அது நடன இயக்குனர் சாண்டிதான். இந்த நிலையில் நேற்று சாண்டியின் பிறந்த நாள் பிக்பாஸ் வீட்டில் கொண்டாடப்பட்டது.

'ராட்சசி' ரிலீஸான மறுநாள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் ஒரு காட்சி உண்டு. அதில் ஜோதிகா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன்