'கபாலி' பாணியில் விளம்பரம் செய்யப்படும் 'தர்பார்'

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த படம் ரிலீஸாவதற்கு தேவையான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்காவில் ஜனவரி எட்டாம் தேதி பிரிமியர் காட்சிகள் திரையிடப்படுவது உறுதி என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் எட்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் விளம்பரங்கள் விமானத்தில் எழுதப்பட்டு வருவதாக புகைப்படங்களுடன் கூடியதகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கிய ’கபாலி’ திரைப்படம் விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. ’கபாலி’ படத்தை அடுத்து தற்போது ‘தர்பார்’திரைப்படமும் விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமான், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். 2020ஆம் ஆண்டின் முதல் சூப்பர்ஹிட் வெற்றிப்படமாக ‘தர்பார்’ இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

17 வயது சிறுவனுடன் மாயமான 26 வயது பெண்: மதுரையில் பரபரப்பு

மதுரையில் 17 வயது சிறுவன் ஒருவன், 26 வயது பெண்ணுடன் மயமாகி விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பாடகி சுசித்ரா வெளியிட்ட அடுத்த வீடியோ: இணையதளங்களில் பரபரப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா 'சுசுலீக்ஸ்' என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

தளபதியின் திரையுலக தம்பி தனுஷின் முக்கிய அறிவிப்பு

நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தனுஷ் வெளியிட இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில்

இன்று ஒருநாள் குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்...?  என்னென்ன நடக்கும் தெரியுமா?

குளித்து விட்டு கோயிலுக்கு சென்றால் அதன் தமிழ் புத்தாண்டு என்றும், குடித்துவிட்டு கும்மாளம் போட்டால் அது ஆங்கில புத்தாண்டு என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும்

3வது திருமணம் செய்ய 2 வயது குழந்தையை கொலை செய்த 23 வயது இளம்பெண்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏற்கனவே 2 திருமணம் செய்த நிலையில் மூன்றாவது திருமணம் செய்வதற்காக தனது இரண்டு வயது குழந்தையை கொலை