ஜெயம் ரவி, துல்கர் சல்மான் விலகியதால் 'தக்லைஃப்' படத்தில் ஏற்பட்ட மாற்றம் .. மாஸ் செய்யும் சிம்பு..!

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

’தக்லைஃப்’ படத்திலிருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் விலகியதால் மணிரத்னம் வேற லெவலில் ஸ்கிரிப்டில் மாற்றம் செய்துள்ளதாகவும் இந்த மாற்றம் காரணமாக சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கூட டெல்லியில் உள்ள ஒரு கோவிலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் ’தக்லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் கமல்ஹாசன், சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் நடிக்க ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென கால்ஷீட் காரணமாக இருவரும் விலகி விட்டதாகவும் அவர்களுக்கு பதிலாக தான் சிம்பு மற்றும் அசோக் செல்வன் இந்த படத்தில் இணைந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்த தகவலின் படி ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் நடிக்க இருந்த கேரக்டர்கள் கதையில் இருந்து தூக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் புதிதாக ஸ்கிரிப்ட்டில் மாற்றம் செய்த மணிரத்னம் சிம்பு மற்றும் அசோக் செல்வனின் கேரக்டரை எழுதி இருப்பதாகவும், எனவே ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் கேரக்டர்களில் சிம்பு, அசோக் செல்வன் நடிக்கவில்லை என்றும் இருவரும் புதிதாக அமைக்கப்பட்ட கேரக்டர்களில் தான் நடித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் முக்கால்வாசி பகுதியில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் இருக்கும் என்பதால் சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் மிகச் சிறந்த விருந்தாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.