'ஜவான்' ரிலீசுக்கு பின் 3 மாதங்கள் முக்கியமானது.. அட்லி

  • IndiaGlitz, [Wednesday,September 06 2023]

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’ஜவான்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் முழு வீச்சில் நடந்துள்ள நிலையில் இறுதி கட்ட புரமோஷன் நடைபெற்று வருகிறது.

நாளை இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவுகளில் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது என்பது இந்த படம் தான் ’பதான்’ படத்திற்கு இணையாக வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ’ஜவான்’ படத்திற்காக தனது உழைப்பை கொடுத்த இயக்குனர் அட்லி, அடுத்த மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாடு சென்று ஓய்வெடுப்பார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அட்லி, ‘குடும்பம், மகனுக்காக அடுத்த மூன்று மாதங்கள் நான் ஓய்வெடுக்கப் போகிறேன், அடுத்த படம் குறித்து ஓய்வுக்கு பின்னர் தான் யோசிக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்

மேலும் என் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர் தளபதி விஜய், அவரை வைத்து மீண்டும் படம் எடுக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். எனவே அட்லியின் அடுத்த படம் தளபதி விஜய்யின் படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.