close
Choose your channels

இர்பான், டிடிஎப் வாசனை அடுத்து விஜே சித்துவுக்கு சிக்கல்.. காவல்துறை ஆணையரிடம் புகார்..!

Friday, May 31, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக பிரபல யூடியூபர்கள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் என்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜே சித்து மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவித்து அதை ஒரு விழாவாக கொண்டாடும் வீடியோவை தனது சேனலில் பதிவு செய்திருந்த நிலையில் அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை பரிந்துரை செய்த நிலையில் அதன் பின்னர் இர்பான் மன்னிப்பு கேட்டதை அடுத்து அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அதேபோல் சமீபத்தில் டிடிஎஃப் வாசன் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலை விதிகளை மதிக்காமல் செல்போனில் பேசியபடி சென்றதால் கைது செய்யப்பட்டார் என்பதும், அதன் பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இர்பான் , டிடிஎப் வாசனை அடுத்து தற்போது விஜே சித்து மீது சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல், அஜாக்கிரதையாக, செல்போனில் பேசியபடி வாகனம் இயக்கியதாகவும், அவருடைய வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என்றும் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

மேலும் அவர் இந்த புகாரில், ‘விஜே சித்து வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.