இர்பான், டிடிஎப் வாசனை அடுத்து விஜே சித்துவுக்கு சிக்கல்.. காவல்துறை ஆணையரிடம் புகார்..!

  • IndiaGlitz, [Friday,May 31 2024]

கடந்த சில நாட்களாக பிரபல யூடியூபர்கள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனர் என்ற நிலையில் தற்போது அடுத்த கட்டமாக விஜே சித்து மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல யூடியூபர் இர்பான் தனது மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவித்து அதை ஒரு விழாவாக கொண்டாடும் வீடியோவை தனது சேனலில் பதிவு செய்திருந்த நிலையில் அது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை பரிந்துரை செய்த நிலையில் அதன் பின்னர் இர்பான் மன்னிப்பு கேட்டதை அடுத்து அவர் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது என்றும் கூறப்பட்டது.

அதேபோல் சமீபத்தில் டிடிஎஃப் வாசன் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலை விதிகளை மதிக்காமல் செல்போனில் பேசியபடி சென்றதால் கைது செய்யப்பட்டார் என்பதும், அதன் பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இர்பான் , டிடிஎப் வாசனை அடுத்து தற்போது விஜே சித்து மீது சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜே சித்து போக்குவரத்து விதிகளை மதிக்காமல், அஜாக்கிரதையாக, செல்போனில் பேசியபடி வாகனம் இயக்கியதாகவும், அவருடைய வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என்றும் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

மேலும் அவர் இந்த புகாரில், ‘விஜே சித்து வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'குட் பேட் அக்லி' படத்தில் நயனும் இல்லை.. ஸ்ரீலீலாவும் இல்லை.. எதிர்பாராத ட்விஸ்ட்..!

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில்

எதிர்பார்த்தது போலவே பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் பள்ளிகள் திறந்து விட்டு அதன் பிறகு மீண்டும்

கவரிங் நகைகள் போட்ட தங்க மயிலுக்கு ஆப்பு: 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த சீரியல் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக

தன் கணவரின் மரணத்தில் மர்மம் இருக்கு - சீரியல் நடிகை சாய் லட்சுமி

என் புருஷன ஒரு பார்ட்டில ட்ரிங்க்ஸ்ல பாய்சன் கலந்து கொடுத்து பின் மண்டையில அடிச்சி கொன்னுட்டாங்க அது எனக்கு அவர் இறந்து போய் 5 வருஷத்துக்கு அப்புறம் தெரிய வந்துச்சி...

'பத்து தல' இயக்குனரின் அடுத்த படம்.. பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிம்பு நடித்த 'பத்து தல' படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.