5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த இசையமைப்பாளர்: ஹரி படத்தில் சிறப்பு தோற்றம்!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த ஒருவர் ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஹரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் கங்கைஅமரன் என்பது தெரிந்ததே. இவர் இசையமைப்பது மட்டுமின்றி பாடலாசிரியராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘கரகாட்டக்காரன்’ படத்தில் தொடங்கி ஒருசில திரைப்படங்களில் கங்கை அமரன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது ஹரி இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு ’சென்னை 28’ இரண்டாம் பாகம் படத்தில் நடித்திருந்த கங்கை அமரன், ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கங்கை அமரன் ஜோதிடர் வேடத்தில் நடித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல் பாகம் ரிலீசுக்கு முன்பே 2வது பாகத்தின் படப்பிடிப்பு: 'புஷ்பா' உரிமைக்கு போட்டி!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக

தாலிபான்கள் வசம் சென்றுவிட்ட ஆப்கானிஸ்தான்… இனியென்ன நடக்கும்?

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் கடந்த 10 தினங்களாக நாடு முழுவதும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

இதுவரை நான் யாரிடமும் சொல்லாத விஷயம்: நயன்தாரா 

விஜய் டிவியில் நயன்தாரா அளித்த பேட்டியில் இதுவரை நீங்கள் ஒரு விஷயத்தை மீண்டும் முன்பு போல மாற்ற வேண்டும் என்று நினைத்தால் எதை மாற்றுவீர்க்ள் என்ற கேள்விக்கு மிகவும் நெகிழ்ச்சியான

விக்னேஷ் சிவனிடம் பிடித்த விஷயங்கள்: நயன்தாரா இதுவரை சொல்லாத விஷயங்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் விஜய் டிவியில் இன்று அளித்த பேட்டியில் இதுவரை விக்னேஷ் சிவன் குறித்து சொல்லாத சில விஷயங்களை கூறியிருக்கிறார். விக்னேஷ் சிவனை தனக்கு ஏன் பிடிக்கும்

நயன்தாராவை முதன்முதலில் அழவைத்த டிடி!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் பேட்டிவிஜய் டிவியில் இன்று ஒளிபரப்பானது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த பேட்டியில் பல சுவராசியமான நகைச்சுவை அம்சங்கள் இருந்தன.