5 வருடங்களுக்கு பின் தனுஷ் உடன் மீண்டும் இணைந்த பிரபல நடிகை.. இரவு பகலாக படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Monday,September 04 2023]

கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷின் படத்தில் நடித்த பிரபல நடிகை 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள செட்டில் சுமார் 400 துணை நடிகர், நடிகைகளுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு ஒரு முக்கியமான கேரக்டரை தனுஷ் கொடுத்துள்ளதாகவும் அந்த கேரக்டரின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, சந்திப் கிஷான், துஷாரா விஜயன், துல்கர் சல்மான், அனிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு ’ராயன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த இன்னும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.