close
Choose your channels

முதல்வர் ஆனதும் முதல் கையெழுத்து எது தெரியுமா? கமல்ஹாசன்

Tuesday, March 27, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் தீவிரமாக உள்ளார். அவரது கட்சியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினராக சேர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி திருச்சியில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த கமல் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று பொன்னேரியில் தனியார் கல்லூரி  ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அதில், நான் தமிழக முதல்வரானால் எனது முதல் கையெழுத்து லோக் ஆயுக்தாவாகதான் இருக்கும்' என்று கேள்வி ஒன்றுக்கு கமல் பதிலளித்தார். ஏற்கனவே ஒருசில அரசியல்வாதிகள் இதே வாக்குறுதியை கொடுத்தனர் என்பதும் ஆனால் அந்த அரசியல்வாதிகள் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கல்லூரி விழாவில் கமல் மேலும் கூறியபோது, 'மாணவர்களை அரசியல்வாதியாக இருக்க சொல்லவில்லை; அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்றும்  நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு இருக்கும் தெளிவு கூட, பிறருக்கு இல்லை' என்றும் நம் பிள்ளைகள் படிப்பபை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment