'அரண்மனை' 4ஆம் பாகத்தை அடுத்து இன்னொரு 4ஆம் பாக திரைப்படம்.. த்ரிலுக்கு தயாராகும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,June 05 2024]

தமிழ் திரை உலகில் அதிகபட்சமாக இரண்டு பாகங்கள் மட்டும் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் ’சிங்கம்’ ’இந்தியன்’ உள்பட ஒரு சில படங்கள் மட்டுமே மூன்றாம் பாகமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சுந்தர் சி தான் இயக்கிய ‘அரண்மனை’ படத்தின் நான்காம் பாகத்தை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார் என்பதும் அந்த படம் சூப்பர் வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ‘அரண்மனை’ படத்தை அடுத்து ’காஞ்சனா’ படத்தின் நான்காம் பாகத்தை இயக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டு உள்ளதாகவும் இதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே ’காஞ்சனா 4’ படத்தின் ஸ்கிரிப்ட் பணியை ராகவா லாரன்ஸ் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தை அவரே தயாரித்து இயக்க இருப்பதாகவும் மேலும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ’காஞ்சனா’ படத்தின் முந்தைய பாகங்கள் மிகப்பெரிய வசூல் செய்து வெற்றி பெற்ற நிலையில் 4ஆம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் இந்த திரில் படத்தை ரசிக்க, ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை சுனைனாவுக்கு திருமணமா? லாக் ஆன புகைப்படம் வைரல்..!

நடிகை சுனைனா லாக் ஆன புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனக்கு விரைவில் திருமணம் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

ஆன்மீகமும், தீர்வுகளும்: டாக்டர். தீபா அருள்ஆலான் பேட்டி!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், டாக்டர். தீபா அருள்ஆலான் அவர்கள் பல்வேறு ஆன்மீக தகவல்களையும், பிரச்சனைகளுக்கு தீர்வுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹாட்ஸ்டாரில் 'உப்பு புளி காரம்'.. பொன்வண்ணனுக்கு இன்னொரு மகனா? திடீர் ட்விஸ்ட்..!

ஹாட்ஸ்டாரில்  ஒளிபரப்பாகி உள்ள 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரின் முதல் இரண்டு எபிசோடுகள் எப்படி இருந்தது என்பதை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த இரண்டு எபிசோடுகளில் தனது

கண்ணன் ரவி குழுமத்தின்  'பராக்' உணவகம்: பிரமாண்டமான தொடக்கவிழா..!

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் தொழில் அதிபராக உள்ள தமிழர் கண்ணன் ரவி, துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் பல்வேறு தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

ரஜினிகாந்த் திடீரென டெல்லி செல்கிறாரா? மோடி, சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஆன்மீக பயணமாக இமயமலை சென்றுள்ளார் என்பதும் அவர் கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் பாபா குகை ஆகிய பகுதிகளுக்கு சென்ற புகைப்படம்