close
Choose your channels

அஜித்தை அடுத்து சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி - ஷாம்லி.. 24 வருடங்களுக்கு முன் நடந்த மேஜிக்..!

Friday, June 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் சந்தித்தார் என்பதும், இருவரது படங்களின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்த போது இந்த சந்திப்பு நடந்தது என்பதையும் பார்த்தோம். மேலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அஜித் குறித்து பெருமையாக கூறி இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி அஜித்தின் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டதையும் பகிர்ந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

மேலும் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது சகோதரி ஷாம்லி ஆகிய இருவரும் தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்கள் என்ற மலரும் நினைவுகளை அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அஜித் மற்றும் சிரஞ்சீவி சந்திப்பு குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது சகோதரி ஷாம்லி மற்றும் அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஆகிய மூவரும் சிரஞ்சீவியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்த புகைப்படத்தை ஷாம்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு, சிரஞ்சீவியுடன் 24 ஆண்டுகளுக்கு முன் நடித்த புகைப்படத்தையும் தற்போது சந்தித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த மேஜிக் புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘சிரஞ்சீவி சார் அவர்களின் அன்பு என்றும் மாறாதது ’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடித்த ‘ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஷாலினி மற்றும் ஷாம்லி ஆகிய இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருந்தனர் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.