அஜித்தை அடுத்து சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி - ஷாம்லி.. 24 வருடங்களுக்கு முன் நடந்த மேஜிக்..!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் அஜித் சந்தித்தார் என்பதும், இருவரது படங்களின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்த போது இந்த சந்திப்பு நடந்தது என்பதையும் பார்த்தோம். மேலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை சிரஞ்சீவி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து அஜித் குறித்து பெருமையாக கூறி இருந்தார் என்பதும் அதுமட்டுமின்றி அஜித்தின் முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் கலந்து கொண்டதையும் பகிர்ந்து இருந்தார் என்பதையும் பார்த்தோம்.

மேலும் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது சகோதரி ஷாம்லி ஆகிய இருவரும் தன்னுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்கள் என்ற மலரும் நினைவுகளை அவர் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அஜித் மற்றும் சிரஞ்சீவி சந்திப்பு குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது சகோதரி ஷாம்லி மற்றும் அவர்களது சகோதரர் ரிச்சர்ட் ரிஷி ஆகிய மூவரும் சிரஞ்சீவியை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுகுறித்த புகைப்படத்தை ஷாம்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததோடு, சிரஞ்சீவியுடன் 24 ஆண்டுகளுக்கு முன் நடித்த புகைப்படத்தையும் தற்போது சந்தித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த மேஜிக் புகைப்படத்திற்கு கேப்ஷனாக ‘சிரஞ்சீவி சார் அவர்களின் அன்பு என்றும் மாறாதது ’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 1990 ஆம் ஆண்டு சிரஞ்சீவி மற்றும் ஸ்ரீதேவி நடித்த ‘ஜெகடேகா வீருது அதிலோக சுந்தரி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஷாலினி மற்றும் ஷாம்லி ஆகிய இருவரும் குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருந்தனர் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சின்ன முருகன் வைபவ் மகேஷ்: முருக பக்தி பரவசம்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இனிமையான வீடியோ ஒன்றில், சிறுவன் வைபவ் மகேஷ் அவர்கள், முருகன் பக்தி பாடல்களையும் கதைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வால் வரும் பிரச்சனைக்கு குரல் கொடுத்த வாணி போஜன்.

வீரம் மிக்க அரசியல் பெண்ணாக நடித்து அசத்தினார்.இதற்கு முன்பு பார்த்ததை காட்டிலும் ஒரு புதிதான அரசியல் விவாதம் மற்றும் ஒரு திறம்மிக்க பெண்ணாக நடித்தது உண்மையிலே அனைவரையும் ஈர்த்தது.

நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. விமான நிலையத்தில் பரபரப்பு..!

நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே ஒரு இமெயில்.. 'எதிர்நீச்சல்' சீரியலுக்கு எண்ட்கார்டு போட்ட இயக்குனர் திருச்செல்வம்..!

'எதிர்நீச்சல்' சீரியல் இயக்குனர் திருச்செல்வனுக்கு ஒரே ஒரு இமெயில் வந்ததாகவும் அதனை அடுத்து அவர் உடனடியாக அந்த சீரியலை முடிக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்தை சந்தித்த சரத்குமார் குடும்பம்.. வைரலாகும் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவருடைய வீட்டிற்கு சென்று சரத்குமாரின் குடும்பம் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.