close
Choose your channels

33 ஆண்டுகளுக்கு பின் இணையும் ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி: 'தளபதி 2' உருவாகிறதா?

Sunday, October 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டாரின் ரஜினிகாந்த் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’தளபதி’ திரைப்படம், கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில், மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து, ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

33 ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இணைந்த ’தளபதி’ படம், இருவரும் இணைந்த ஒரே படம் என்ற பெருமையை பெற்ற நிலையில், மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, கமல்ஹாசன் உடன் ‘தக்லைஃப்’ படத்திற்காக இணைந்த மணிரத்னம், தற்போது ரஜினியுடன் இணைய இருப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ’கூலி’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அதை அடுத்து ’ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பார் என்றும், இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, அவர் மணிரத்னம் படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 12ஆம் தேதி, ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’தளபதி’ படத்திற்கு பிறகு இணையும் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் படம், தளபதி படத்தின் இரண்டாம் பாகமா அல்லது வேறு கதை அம்சம் கொண்ட படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment