30 வருடங்களுக்கு பின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. அல்லு அர்ஜுன் உள்பட 4 மாஸ் நடிகர்கள் பரிசீலனை..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

30 ஆண்டுகளுக்கு முன் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் அந்த படத்தில் நாயகனாக நடிக்க அல்லு அர்ஜுன், யாஷ் உட்பட நான்கு நடிகர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் நடித்த ’கல்நாயக்’ என்ற திரைப்படம் நடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் பல்ராம் என்ற கேங்ஸ்டர் கேரக்டரில் சஞ்சய்தத் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் இந்த படத்தில் தான் 'சோலி கே பீச்சே க்யா ஹே' என்ற பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சுபாஷ் கை 30 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகத்திற்கான பணிகளில் இறங்கி இருக்கும் நிலையில் சஞ்சய் தத் நடித்த பல்ராம் கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர்களை அணுகி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அல்லு அர்ஜுன், யாஷ், ரன்பீர் கபூர் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர்களில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ‘கல்நாயக்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

'அரண்மனை 4' ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பா? சோலோவாக ரிலீஸ் ஆகிறதா விஷாலின் 'ரத்னம்'?

ஏப்ரல் 26 ஆம் தேதி விஷால் நடித்த 'ரத்னம்'மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது

இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு இதுதான் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா விளக்கம்..!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென இன்று முடங்கியதாக வெளியான தகவலை அடுத்து அவரை அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஜாதக தோஷங்கள் மற்றும் யோகங்கள் - ஜோதிடர் Soorth Babu விளக்கம்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஜோதிடர் மற்றும் ஆன்மீக ஞானி திரு. Soorth Babu அவர்கள் அளித்த பேட்டி, ஜோதிடத்தின் ஆர்வலர்களை கவர்ந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்.. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு..!

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை

திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம்.. என்ன நடந்தது?

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.