close
Choose your channels

29 ஆண்டுகளுக்கு பின் முதல் பட நாயகனை சந்தித்த பிரபல நடிகை.. எமோஷனல் பதிவு..!

Sunday, June 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை 29 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் பட நாயகனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து எமோஷனல் ஆக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ’பர்சாத்’ என்ற ஹிந்தி படம் மூலம் திரையுலகில் டிவிங்கிள் கண்ணா அறிமுகமானார். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தர்மேந்திரா - ஹேமாமாலினி மகளான இவர், முதல் படத்தில் பாபி தியோல் ஜோடியாக நடித்திருந்த நிலையில் இருவரது ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் டிவிங்கிள் கண்ணா அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். இதையடுத்து கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது முதல் நாயகன் ஆன பாபி தியோலை, ட்விங்கிள் கண்ணா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து, தனது முதல் படமான ‘பர்சாத்’ படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்து எமோஷனலாக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

29 ஆண்டுகளுக்கு பிறகு பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தனக்கு மகிழ்ச்சி என்றும் இப்போதும் அவர் சினிமாவில் பிஸியாக இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.