29 ஆண்டுகளுக்கு பின் முதல் பட நாயகனை சந்தித்த பிரபல நடிகை.. எமோஷனல் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

பிரபல பாலிவுட் நடிகை 29 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் பட நாயகனை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து எமோஷனல் ஆக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ’பர்சாத்’ என்ற ஹிந்தி படம் மூலம் திரையுலகில் டிவிங்கிள் கண்ணா அறிமுகமானார். பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான தர்மேந்திரா - ஹேமாமாலினி மகளான இவர், முதல் படத்தில் பாபி தியோல் ஜோடியாக நடித்திருந்த நிலையில் இருவரது ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் டிவிங்கிள் கண்ணா அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். இதையடுத்து கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது முதல் நாயகன் ஆன பாபி தியோலை, ட்விங்கிள் கண்ணா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்து, தனது முதல் படமான ‘பர்சாத்’ படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவு செய்து எமோஷனலாக சில விஷயங்களை தெரிவித்துள்ளார்.

29 ஆண்டுகளுக்கு பிறகு பாபி தியோலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது தனக்கு மகிழ்ச்சி என்றும் இப்போதும் அவர் சினிமாவில் பிஸியாக இருப்பதை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இப்படி டிரஸ் போட்டு சைக்கிள் ரிக்சா ஓட்டலாமா? டிராபிக் என்ன ஆகும்? மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை மாளவிகா மோகனன் சைக்கிள் ரிக்சா முன்பு கிளாமர் உடை அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் '

'சூர்யா 44' படத்தில் இணைந்த சிம்பு பட நடிகர்.. அந்தமான் விரைவதாக தகவல்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமானில்ல் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிம்பு படத்தில் நடித்த மலையாள

குக் வித் கோமாளி சீசன் 5: குக்குகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஸ்ரீகாந்த் தேவா மட்டுமே

திருமணம், குழந்தை பிறப்பிற்கு பின் ரீஎன்ட்ரி ஆகும் சாயிஷா.. யாருடன் முதல் படம்..!

நடிகை சாயிஷா திருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி  ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மதுவிலக்கு சாத்தியமில்லை.. ஆனால் இதை செய்யலாம்.. அரசுக்கு கமல்ஹாசன் அறிவுரை..!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரடியாக