close
Choose your channels

21 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ஜோதிகா: தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படமா?

Sunday, November 20, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரைப்படம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். அதன் பின் ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா தொடர்ச்சியாக தமிழில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தற்போது கூட அவர் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ‘காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 21 ஆண்டுகள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி திரையுலகில் ரீ என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு ’லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்த ஜோதிகா அதன்பின் 21 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக ஜோதிகாவை நடிக்க படக்குழுவினர் அணுகியதாகவும், அதற்கு ஜோதிகா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா கேரக்டரில் ராஜ்குமார் ராவ் என்பவர் நடிக்கிறார் என்பதும் துஷார் இத்ராணி என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment