21 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் ஜோதிகா: தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படமா?

தமிழ் தெலுங்கு திரைப்படம் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பின்னர் சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். அதன் பின் ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா தொடர்ச்சியாக தமிழில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

தற்போது கூட அவர் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ‘காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 21 ஆண்டுகள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி திரையுலகில் ரீ என்ட்ரி ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2001ஆம் ஆண்டு ’லிட்டில் ஜான்’ என்ற இந்தி படத்தில் நடித்த ஜோதிகா அதன்பின் 21 ஆண்டுகள் கழித்து தற்போது ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழிலதிபரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நாயகியாக ஜோதிகாவை நடிக்க படக்குழுவினர் அணுகியதாகவும், அதற்கு ஜோதிகா சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா கேரக்டரில் ராஜ்குமார் ராவ் என்பவர் நடிக்கிறார் என்பதும் துஷார் இத்ராணி என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி விஜய்யின் 'வாரிசு' ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!

 தளபதி விஜய் நடிப்பில் தில்ராஜ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவான 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தை பொங்கல்

விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்!

 விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'டிஎஸ்பி' திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

ரசிகர்களை சந்திக்க மாஸ் எண்ட்ரி கொடுத்த விஜய்.. ரசிகர்கள் உற்சாகம்!

தளபதி விஜய் இனி அடிக்கடி ரசிகர்களை சந்திக்க போகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை

விஜயானந்த் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா: முதல்வர் கலந்து கொண்டு வாழ்த்து!

உலகில் வெற்றிக்கு பல விதிகள் இருக்கும் ஆனால் வெற்றிபெற்றவன் கதை வேறு மாதிரி இருக்கும். உண்மையில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கை தான் வெற்றிக்கான வழிகாட்டி. கர்நாடகா மாநிலத்தின் ஒரு

அசீம் வெளியேற வேண்டும்.. கமலிடம் கூறிய ஒட்டுமொத்த போட்டியாளர்கள்

அசீம் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்கள் கமல்ஹாசனிடம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.