நாளை ரிலீஸாகவுள்ள நிலையில் 'ஏலே' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

  • IndiaGlitz, [Thursday,February 11 2021]

இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான ‘ஏலே’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயக்குனர்‌ ஹலிதா சமீம்‌ கூறியதாவது...

என்னுடைய “ஏலே” திரைப்படம்‌ மிகப்பெரும்‌ எண்ணிக்கையிலான பார்வையாளர்களை சென்றடையவுள்ளது என்பதில்‌ பெரும்‌ மகிழ்ச்சி. இயக்குநராக எனது பயணம்‌ ஆரம்பமாவதற்கு முன்னதாகவே “ஏலே” என்‌ மனதிற்கு நெருக்கமான படைப்பாக இருந்தது. தற்போது மிகப்பெரும்‌ வெளீயீடாக பெரும்‌ எண்ணிக்கையிலான ரசிகர்களை ஒரே நாளில்‌ என்‌ படம்‌ சென்றடைவதை, காண மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இத்தகைய புதிய தளத்தை மிகப்பெரும்‌ எண்ணிக்கையிலான ரசிகர்‌ கூட்டத்திடம்‌ உலகம்‌ முழுதும் இத்திரைப்படத்தை வெளியிடும்‌ ஸ்டார்‌ விஜய்‌ தொலைக்காட்சிக்கு எனது நன்றிகள்‌.

ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ விபாசிஸ்‌ சர்கார்‌ கூறியதாவது...

“ஏலே” படம்‌ குடும்பங்கள்‌ கொண்டாடூம்‌ திரைப்படம்‌ ஆகும்‌. மனதை வருடம்‌ இந்த அழகான படைப்பினை பார்வையாளர்களின்‌ இல்லங்களுக்கே கொண்டு செல்வதில்‌ பெருமை கொள்கிறோம்‌. தொலைக்காட்சியின்‌ பலத்தையும்‌ அதன்‌ பிரமாண்டத்தையும்‌ நாங்கள்‌ புரிந்து கொண்டிருக்கிறோம்‌. ஸ்டார்‌ விஜய்‌ தொலைக்காட்சியுடன்‌ இந்த மிகப்பெரும்‌ திரைப்பட வெளியீட்டில்‌ பங்கு கொள்வதில்‌ மகிழ்ச்சி.

வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில்‌ புஷ்கர்‌ & காயத்திரி கூறியதாவது...

ஒரு நல்ல சினிமா, அதன்‌ பார்வையாளர்களை ஏதாவது ஒரு வகையில்‌ கண்டிப்பாக சென்றடையும்‌ என்பதில்‌ எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இயக்குனர்‌ ஹலிதா சமீம்‌ இயக்கியுள்ள “ஏலே” திரைப்படம்‌ எங்களது வால்வாட்சர் பிலிம்ஸ் சார்பில்‌ உருவாகும்‌ முதல்‌ படைப்பு மேலும்‌ எங்களுக்கு மிகவும்‌ நெருக்கமான படைப்பு. மனதிற்கு இதமான இத்திரைப்படம்‌ அனைத்து ரசிகர்களையும்‌ எளிதில்‌ கவரும்‌. ஸ்டார்‌ விஜய்‌ உடைய நேரடியான தொலைக்காட்சி சிறப்பு திரையிடல்‌, இந்த அழகான திரைப்படத்தை உங்கள்‌ இல்லங்களுக்கே எடுத்துவரவுள்ளது. துணிவு மிகுந்த இந்த புதிய நடைமுறை படைப்பாளிகளுக்கும்‌ கதை சொல்லிகளுக்கும்‌ பல புதிய கதவுகளை திறக்கும்‌.

More News

இளைஞருடன் நெருக்கமான புகைப்படம்: காவல்துறையில் புகார் அளித்த 'ரோஜா' சீரியல் நடிகை!

ரோஜா, பாசமலர், பூவே பூச்சூடவா உள்பட பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ஷாமிலி சுகுமார். இவர் தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படாத காட்சிகள்: அனிதாவின் வைரல் வீடியோ!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரம் நடந்த சம்பவங்களில் ஒரு மணி நேரம் மட்டுமே தொகுத்து வழங்கியதை நாம் பார்த்தோம்.

விளம்பரம் : வெறும் 2,999 ரூபாய்க்கு வேற லெவல் டிவி!

ஓடிடி வெப்சீரீஸ், சினிமா, டிவியில் பார்க்கும் ஐபிஎல், ரியாலிட்டி ஷோ எல்லாமே தியேட்டர்ல பார்த்தா எப்படி இருக்கும்

சூர்யா எப்படி இருக்கின்றார்? கார்த்தி டுவீட்!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின் கொரோனாவில் இருந்து குணம் ஆகி விட்டதாகவும்

உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும்: சேலத்தில் முதலமைச்சர்  உறுதி!

மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், உறுதியாக அம்மாவின் ஆட்சி தொடரும் என்றும் சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: