வேலைநிறுத்தத்தால் பொதுமக்கள் பாதிப்பு: பேருந்தை இயக்கி அசத்திய அந்தியூர் எம்.எல்.ஏ

  • IndiaGlitz, [Friday,January 05 2018]

தமிழகத்தில் நேற்று மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென முன்னறிவிப்பு இன்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் உள்ளனர். தினககூலி அடிப்படையில் ஆட்கள் எடுக்கவும் போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பத்து சதவிகித பேருந்துகள் கூட இயங்கவில்லை

இந்த நிலையில் பொதுமக்களின் அவதியை நேரில் பார்த்த அந்தியூர் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன், அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி தானே பேருந்தை இயக்கினார். அவர் அந்தியூரில் இருந்து பவானி வரை சென்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பவானியில் இருந்து அந்தியூர் வந்தார். வரும் 8ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளதால் அதுவரை பேருந்தை இயக்க தயார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

முன்னதாக காவல்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ ராஜாகிருஷ்ணன் தனது ஓட்டுனர் உரிமையை காண்பித்து அவர்களின் அனுமதி பெற்ற பின்னரே பேருந்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இது சட்டத்திற்கு புறம்பானது: ரஜினிக்கு பீட்டா அமைப்பு கடிதம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்தே அவரது ரசிகர்கள் இதனை ஒரு கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர்.

ஊதியம் திருப்தி இல்லை என்றால் வேறு வேலை பாருங்கள்! பஸ் ஊழியர்களுக்கு நீதிபதி எச்சரிக்கை

போக்குவரத்து ஊழியர்கள் ஊதியம் திருப்தியாக இல்லை என்று கருதினால் வேறு வேலை பார்த்து கொள்ளவும் என்று கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி

'சொடக்கு' பாடலுக்கு தடை கோரி அதிமுக நிர்வாகி புகார்!

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடலான 'சொடக்கு மேல சொடக்கு போட்டு

பொங்கல் ரேஸில் இருந்து விலகிய பிரபல நடிகரின் திரைப்படம்

வரும் பொங்கல் திருநாளில் சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', விக்ரமின் 'ஸ்கெட்ச்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சண்முகபாண்டியனின் 'மதுரவீரன், மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி'

வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்சன் திரில்லர் படம்

'இளைஞன்' படத்தை அடுத்து பாடலாசிரியர் பா.விஜய் இயக்கி நடித்துள்ள திரைப்படம் 'ஆருத்ரா'.