'என் செருப்பை கழட்டிவிடு'.. பழங்குடியின சிறுவர்களை அவமதித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

  • IndiaGlitz, [Thursday,February 06 2020]

யானைகளுக்கான சிறப்பு புத்துணர்வு முகாம் ஒவ்வோர் ஆண்டும் 48 நாள்கள் நடைபெறும். இந்தப் புத்துணர்வு முகாமில் தமிழகத்தில் வனத்துறை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகள் பங்கேற்கும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு முகாம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி முகாமில் நடைபெற்று நிறைவடைந்தது.

இந்த நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு அந்தந்த முகாம்களில் இன்று தொடங்கியது. முதுமலை தெப்பக்காட்டில் துவங்கவிருந்த முகாமை துவக்கி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வந்திருந்தார். தொடக்க விழா இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் யானைகள் அனைத்தும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்தன. வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காத்திருந்தனர்.

காலை 9.40-க்கு வந்த வனத்துறை அமைச்சரை வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து வந்தனர். கோயில் அருகில் வந்த அமைச்சர் ஓரமாக நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்களை 'வாங்கடா இங்க' என அழைத்தார். பயத்தில் சிறுவர்கள் தயங்க அருகில் இருந்த வனத்துறையினர், அமைச்சர் அருகில் செல்லவைத்தனர். அங்கு இருந்த அதிகாரிகள், அமைச்சர் சிறுவர்களிடம் கல்வி தொடர்பாக கேள்விகள் கேட்பார் எனத் தயங்கிய சிறுவர்களை அமைச்சரிடம் வரச் செய்தனர்.

ஆனால் சிறுவர்களிடம் அமைச்சர், 'செருப்பு பக்கிளை கழற்றிவிடு' என்றார். அதில் பயந்துபோன ஒரு சிறுவன் கீழே அமர்ந்து காலணிகளைக் கழற்றினார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் மிரண்டுபோயினர். உடனே சுதாரித்த குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமு பத்திரிகையாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்தார். 'யாரும் போட்டோ எடுக்காதிங்க' என போலீஸார் எச்சரித்தனர். சிறுவர்கள் செருப்பை கழற்றியப் பின்னர் அமைச்சர் அருகில் இருந்த உதவியாளர் காலணிகளை எடுத்து ஓரமாக வைத்தார்.

இந்த இரண்டு சிறுவர்களும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர் பாகன்களாக உள்ளனர். பழங்குடி சிறுவர்களை அழைத்து காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

More News

வரி ஏய்ப்பு இருந்தால் சோதனை நடக்கத்தான் செய்யும்: விஜய் வீட்டில் ரெய்டு குறித்து எச்.ராஜா

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமானவரி சோதனை செய்து வருவது தெரிந்ததே. அதனை அடுத்து

பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் சகோதரர் மர்ம மரணம்! கேரளாவில் பரபரப்பு

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் சகோதரர் கேஜே ஜஸ்டின் இன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் மனு: என்ன காரணம்?

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டு தன்னை மிரட்டுவதாக தர்பார் படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

ரஜினி தனது நிலையை மாற்றி கொள்வார்: முக ஸ்டாலின் நம்பிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று சிஏஏ மற்றும் என்.ஆர்.சி குறித்து கருத்து கூறிய போது 'இந்த சட்டங்கள் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும், சிஏஏ சட்டத்தால் இந்தியாவில்

பிங்க் ரீமேக் கதாநாயகனை அழைத்துவர சிறப்பு விமானம்: பரபரப்பு தகவல் 

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த 'பிங்க்' திரைப்படம் தமிழில் 'நேர்கொண்டபார்வை' என்ற பெயரில் ரீமேக் ஆனது என்பதும் தல அஜித் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே