கமல்ஹாசன் ஒரு அரசியல் பிச்சைக்காரர்: அதிமுக நாளேடு கடும் தாக்கு

  • IndiaGlitz, [Wednesday,November 14 2018]

'சர்கார்' படத்தில் அரசின் இலவச பொருட்கள் எரிக்கப்பட்ட காட்சிகள் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், 'இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்கு மட்டுமே தேவை' என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அதிமுக நாளேடான 'நமது அம்மா' நாளிதழில் இதுகுறித்து ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரை கமல்ஹாசன் ஒரு அரசியல் பிச்சைக்காரர் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்த கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது:

பிச்சைக்காரர்களுக்குத் தான் இலவசம் தேவை என்கிறாரே கமல்ஹாசன். அப்படியென்றால் ஊனமுற்ற ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்குகிறாரே அவர், அது எதற்காக? மக்களால் அரசுக்கு வருவாயாக வழங்கப்படுகிற வரிப்பணம், அவர்களுக்கான மக்கள் நலத்திட்டங்களாகி மீண்டும் அவர்களுக்கே உரிய பலன்களாக, திரும்பக் கிடைக்கிறபோது, அதனை ஒருபோதும் இலவசம் என்று சொல்லக்கூடாது என உத்தரவிட்டு அவற்றிற்கு விலையில்லா பொருட்கள் என்கிற பெயரைச் சூட்டியவர் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த எங்கள் அம்மா.

இதையெல்லாம் உள் வாங்கிக் கொள்ளாத உள்நோக்க உளறல் நாயகன். ஈரிலை அரசு மீது தொடர்ந்து வன்மத்தைக் கக்குவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். எங்கள் அம்மாவின் அரசு, கல்வியை, மருத்துவத்தை, ஏழை, எளியோருக்கு விலையில்லாமல் தொடர்ந்து பல்லாண்டுகளாக வழங்குகிறது. அதன் மூலம் கல்வி பயின்று உயர்ந்த பதவிகளால் உச்சம் தொட்டு நிற்பவர்களை எல்லாம் கமலின் கருத்து பிச்சைக்காரர்கள் என்கிறதா?

தொடர்ந்து மூன்றாண்டுகள் இந்தியாவிலேயே உணவு தானிய உற்பத்தியில் தமிழகமே முதலிடம் என்கிற ஹாட்ரிக் சாதனையைப் புரிவதற்கு விவசாயப் பெருமக்களுக்கு விதை, உரம் உள்ளிட்ட இடு பொருட்களை எல்லாம் தமிழக அரசு இலவசமாக தந்து உழவர்களை ஊக்க மூட்டுகிறதே, இதனையெல்லாம் விவசாயிகள் பெறுகிற பிச்சை என்கிறாரா? வில்லங்க ரூப கமல்ஹாசன்.

சரி அதெல்லாம் போகட்டும், “கட்சி தொடங்கிய நீங்க, கட்சியை நடத்துவதற்கு பணத்திற்கு என்ன செய்வீங்க” என்று பத்திரிகையாளர் கேட்டபோது, “எனக்கான நிதியை என் கட்சித் தொண்டர்கள் தருவார்கள்” என்று இலவசத்திற்கு தன் தொண்டர்களிடமே துண்டு விரிக்கிற திருவாளர் கமல்ஹாசனை வேண்டுமானால், அரசியல் பிச்சைக்காரர் என்று அழைக்கலாம்' என் இந்த நாளேடு கூறியுள்ளது.

More News

ஜோதிகா படத்தை முதல் காட்சி பார்க்கவிருக்கும் கல்லூரி மாணவிகள்

பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா நடித்த 'காற்றின் மொழி' திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது

டாக்ஸிவாலா: தியேட்டர் ரிலீசுக்கு முன்னரே ரிலீஸ் செய்த தமிழ் ராக்கர்ஸ்

'அர்ஜூன் ரெட்டி', 'நோட்டா' போன்ற படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படம் 'டாக்ஸிவாலா' இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில்

பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

'அட்டக்கத்தி' மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிய பா.ரஞ்சித் அதன் பின்னர் 'மெட்ராஸ், 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கினார்.

'விவேகம்', 'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆகும் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' சென்சார் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0 திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது