விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் மணிரத்னம் பட நாயகி!

  • IndiaGlitz, [Friday,August 02 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படமான 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இணைந்தார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக அதிதிராவ் ஹைத்ரி இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய 'காற்று வெளியிடை 'மற்றும் 'செக்கச் சிவந்த வானம்' ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்திற்கு இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார். 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

விஷாலுக்கு பிடிவாராண்ட்: அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் உத்தரவு ஒன்றை சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக பிறப்பித்துள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மூக்குடைந்த மதுமிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தலைவர் பதவிக்காக ஒரு புதிய டாஸ்க்கும் வைக்கப்படும்

கும்பகோணம் ஐயர் சிக்கன்: சர்ச்சை விளம்பரத்தால் பரபரப்பு

இதுவரை நாம் 'கும்பகோணம் ஐயர் காபி; என்று தான் விளம்பரம் செய்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் முதல்முறையாக மதுரையில் உள்ள ஒரு உணவகம் கும்பகோணம் ஐயர் சிக்கன்

போனிகபூருக்கு மாலை மரியாதை செய்த மூன்று பேர்!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை'  திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி இன்று திரையிடப்பட்டது

'நேர் கொண்ட பார்வை' ஸ்பெஷல் காட்சி: தாறுமாறான படம் என விமர்சனம்

தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது