சென்னை தொழிலதிபராக மாறிய மணிரத்னம் பட நாயகி!

  • IndiaGlitz, [Friday,November 29 2019]

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ’காற்று வெளியிடை’ என்ற படத்தின் நாயகியாகவும் அதன் பின்னர் அவர் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் ’சைக்கோ என்ற படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ’துக்ளக் தர்பார்’ என்ற படத்திலும் அதிதிராவ் ஹைத்ரி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அதிதி ராவ் ஹைதாரி தொழிலதிபராக மாறியுள்ளார். ஆம் நடிகை அதிதி டென்னிஸ் பிரீமியர் லீக்கில் சென்னையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ’Chennai Stallions’ என்றா டென்னிஸ் அணியை வாங்கியுள்ளார். இதன் மூலம் சென்னை தொழிலதிபர் மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை டென்னிஸ் அணியில் அங்கிதா, சகேத், ஜீவன், புரவ் உள்ளிட்டோர் வரும் டென்னிஸ் லீக் பிரிமியரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னை ஒரு டென்னிஸ் வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்பது தனது கனவு என்றும் ஆனால் தான் டான்ஸ், சினிமா ஆகியவைகளில் விருப்பம் கொண்டு நடிகையாகிவிட்டதாகவும், தற்போது தந்தையின் கனவை நனவாக்கும் வகையில் டென்னிஸ் அணியை வாங்கியுள்ளதாகவும் அதிதிராவ் ஹைத்ரி தெரிவித்துள்ளார்.