என்னை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்தார். பிரபல நடிகை மீது கணவர் குற்றச்சாட்டு..!

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

பொதுவாக நடிகைகள் தான் தங்கள் கணவர் தங்களை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டு கூறுவது உண்டு. ஆனால் ஒரு நடிகையின் கணவர் தன்னை நிர்வாணமாக்கி தனது மனைவி கொடுமைப்படுத்தினார் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்தான் நடிகை ராக்கி சாவந்த் கணவர் ஆதில்.

நடிகை ராக்கி சாவந்த் ஏற்கனவே ரித்தேஷ் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதில் துராணி என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் திருமணம் ஆன சில மாதங்களில் தன்னுடைய கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று போலீசில் ராக்கி சாவந்த் புகார் அளித்ததால் ஆதில் கைது செய்யப்பட்டார்

ஐந்து மாத சிறைவாசத்திற்கு பிறகு தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள ஆதில், செய்தியாளர்களை சந்தித்தபோது சில திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். உண்மையில் நான் ராக்கி சாவந்தை தாக்கவில்லை, அவர்தான் என்னை பலமுறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து, நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துள்ளார். என்னுடைய பெயரை கெடுக்கவும், என்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று முத்திரை குத்தவும் அவர் முயற்சி செய்து என்னை மிரட்டி வருகிறார்

என்னை திருமணம் செய்த பின்னரும் அவர் முதல் கணவருடன் தொடர்பில் இருந்தார் என்பது எனக்கு தெரிய வந்தது. இதனால் தான் என்னை அவர் மிரட்டி கொடுமைப்படுத்தி வருகிறார் என்று ஆதில் கூறியுள்ளார். அவருடைய இந்த குற்றச்சாட்டு பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவு, ஆனால்.. விஜய பிரபாகரன் பேட்டி!

கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையின் உடல்நிலை

அரசியல் கட்சி தொடங்கும் முன் ஒரு அரசியல் படம்.. விஜய்யின் மாஸ் திட்டம்..!.

 தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கும் முன்பே அவர் ஒரு மாஸ் அரசியல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதுதான் 'தளபதி 68' படம் என்றும்

'ஆக்சன்' என்று சொல்லிவிட்டால் உடனே புயலாக மாறி விடுவார்: 'லியோ' விஜய் குறித்து வில்லன் நடிகர்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு

யோகி காலில் விழுந்தது ஏன்? சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சென்ற போது அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

ஒரு செம்ம ரோபோ காதல்.. ஹாட்ஸ்டாரில் விரைவில் ரிலீஸ்..!

தமிழ் திரை உலகில் 'சிவா மனசுல சக்தி' 'பாஸ் என்ற பாஸ்கரன்' 'ஒரு கல் ஒரு கண்ணாடி  உள்பட ஒரு சில வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  வெப் தொடர் 'MY3.