நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.. என்ன வழக்கு?

  • IndiaGlitz, [Tuesday,April 23 2024]

கார் விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது என்பதும், இந்த விபத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பவானி செட்டி என்ற யாஷிகாவின் நெருங்கிய தோழி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் யாஷிகா ஆனந்த் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு நடிகையும் பிக்பாஸ் போட்டியாளருமான யாஷிகா ஆனந்த் தனது தோழிகள் மற்றும் நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்ததாகவும், அவர் சென்ற கார் மாமல்லபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் 2 ஆண் நண்பர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பவானி செட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இவர் யாஷிகாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் என்றும் கூறப்பட்டது.

 

More News

56 வயது ஹீரோவுக்கு மனைவியாக நடித்தது ஏன்? 26 வயது நடிகை விளக்கம்..

56 வயது ஹீரோவுக்கு மனைவியாக 26 வயது நடிகை நடித்த நிலையில் அந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகி உள்ள நிலையில் இதுகுறித்து அந்த நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா? என ஓப்பனாகவே கேட்டார்கள்.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை அதிர்ச்சி தகவல்..!

விஜய் டிவியில் தற்போது 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' ஒளிபரப்பாகி வரும் நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' முதல் சீசனில் நடித்த நடிகை ஒருவர் தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஓகேவா? என ஓப்பனாகவே

ராஜஸ்தானில் இருந்து இடம்பெயரும் 'தக்லைஃப்' குழு.. கமல் - சிம்பு காட்சிகள் படமாக்கப்படுவது எங்கே?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் ஆகிய இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணையும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

'கூலி' படத்தில் ரத்னகுமாருக்கு பதில் இவரா? சூப்பர் ஹிட் படத்தில் பணிபுரிந்தவர் ஆச்சே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் குறித்த வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் எடுத்த ஒரு அதிரடி முடிவு குறித்த தகவல் தற்போது

என்ன நடந்தது துபாயில்!தமிழ்நாட்டையும் தொடருமா இந்த ஆபத்து?

எனவே இந்த மாதிரியான நேரத்தில் மேக விதைப்பு என்ற முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழையை வர வைப்பது ஒரு வழக்கமாகவே உள்ளது...