என்னை ஆன்ட்டி என்று யாராவது சொன்னால் போலீஸில் புகார் செய்வேன்: பிரபல நடிகை எச்சரிக்கை

  • IndiaGlitz, [Saturday,August 27 2022]

37 வயதாகும் பிரபல நடிகை ஒருவரை ரசிகர்கள் ஆன்ட்டி என்று கூறி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வரும் நிலையிலும் தன்னை ஆன்ட்டி என்று யாராவது அழைத்தால் அவர்கள் மீது போலீசில் புகார் செய்வேன் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக அறிமுகமாகி அதன் பின் நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை அனுசுயா. இவர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ என்ற படத்தில் வில்லியாக நடித்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’லைகர்’ திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதை அடுத்து தனது பங்குக்கு நடிகை அனுசுயா அந்த படத்தை விமர்சனம் செய்தார். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அவரை திட்டியதோடு அவரை ஆன்ட்டி என்றும் அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.

தன்னை ஆன்ட்டி என்று விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வந்த அனுசுயா ஒரு கட்டத்தில் கோபமாகி தன்னை ஆன்ட்டி என்று விமர்சிப்பவர்கள் மீது போலீஸில் புகார் கொடுப்பேன் என்று எச்சரிக்கை செய்துள்ளார். மேலும் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் எப்படி என்னை ஆன்ட்டி என்று அழைக்கலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் தொடர்ச்சியாக இன்னும் அவரை ஆன்ட்டி என்று விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை: 'திருச்சிற்றம்பலம்' படம் குறித்து நித்யாமேனன்!

தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், இந்தப் படம் ரூ 50

மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்க தயார்: சந்தானம் அறிவிப்பால் ஆச்சரியம் அடைந்த நடிகர்!

நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் ரஜினிகாந்த் அஜித் படங்களில் காமெடி வேடத்தில் நடிக்க வாய்ப்புகளை கூட அவர் மறுத்து விட்டார் என்பதும் தெரிந்ததே. 

'பொன்னியின் செல்வன்' ரன்னிங் டைம் இவ்வளவா? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

 பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் நாவலான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் உருவாகியுள்ளது உள்ளது என்பதும் இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உட்பட பலர் நடித்துள்ளனர்

அரசியலில் மீண்டும் குதித்த கே.பாக்யராஜ்: எந்த கட்சியில் தெரியுமா?

திரைப்பட இயக்குனர் கே பாக்யராஜ் மீண்டும் அரசியலில் குதித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து பிடி உஷா: வைரல் புகைப்படம்!

பிரபல தடகள வீராங்கனை பிடி உஷா, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.