மாலையும் கழுத்துமாய் பெற்றோருடன் நடிகை தமன்னா. என்ன விசேஷம்?

  • IndiaGlitz, [Saturday,January 27 2024]

நடிகை தமன்னா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அசாம் மாநில தலைநகர் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தற்போதும் பிஸியான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் என்பதும் சுந்தர் சி யின் ’அரண்மனை 4’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வரும் நிலையில் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா சென்று வரும் தமன்னா தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள காமாக்யா என்ற கோயிலுக்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று வழிபாடு செய்துள்ளார்.

கோவிலில் தமன்னா மற்றும் அவருடைய பெற்றோர் உறவினர்கள் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’எனது அன்புக்குரியவர்களுடன் புனிதமான தருணங்கள்’ என்றும் அவர் கேப்ஷனாக இந்த புகைப்படங்களுக்கு பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் இணைந்த ஆர்யா - சந்தானம் கூட்டணி.. ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக..!

ஆர்யா மற்றும் சந்தானம் இணைந்து நடித்த 'பாஸ் என்ற பாஸ்கரன்' உட்பட சில படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் இருவரும் இணைந்து நடித்தாலே காமெடி களைகட்டும் என்பதும் தெரிந்ததே.

காதலருக்கு பிறந்தநாள்.. கட்டிப்பிடித்து உருகி உருகி வாழ்த்து சொன்ன பிரியா பவானி சங்கர்..!

நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பல ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வரும் நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 'கங்குவா' படத்தின் அந்த 'உதிரன்' இவர் தானா? மாஸ் போஸ்டர் ரிலீஸ்..!

 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 'உதிரன்' என்ற கேரக்டரின் போஸ்டர் இன்று வெளியாகும்

 AI மூலமாக மறைந்த பாடகர்களுக்கு உயிர் கொடுத்த ஏஆர் ரஹ்மான்: 'லால் சலாம்' படத்தில் ஒரு ஆச்சரியம்..!

செயற்கை நுண்ணறிவு என்ற  AI தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் தேர்தல் பிரச்சாரத்தில் கூட மறைந்த தலைவர்களின்  உருவங்கள் மற்றும் குரல்களை

'அயலான்' தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் ஒரு பக்கம் ரூ.75 கோடிக்கு மேல் வசூலை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ்