ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நரிகளின் கதை.. ஸ்ரீரெட்டியின் அடுத்த பதிவு..!

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று விஷால் குறித்து மறைமுகமாக ஒரு பதிவு செய்த நிலையில் தற்போது நரிகளின் கதை என்ற ஒரு பதிவை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து சில நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியதை அடுத்து என்னிடம் சில செருப்புகள் உள்ளது என்று விஷாலை மறைமுகமாக தாக்கி ஸ்ரீ ரெட்டி செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஸ்ரீ ரெட்டி தற்போது இன்னொரு பதிவை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் நரிகளின் கதை உள்ளது. சின்ன சின்ன சாதனைகளை அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும் பெண்கள் துணிவோடு போராடினால், அவள் ஒரு திமிர் பிடித்தவள், நல்ல குணாதிசயமான பெண் இல்லை என்று மக்கள் சொல்வார்கள்.

நம் சுற்றுப்புறங்களில் சில நரிகள் உள்ளன. பெண்கள் அந்த நரிகளுக்கு விருந்தளித்து உணவளிக்க வேண்டும். ஒரு ஆணை விட அதிக உழைப்பை பெண்கள் செய்தாலும், ஆண்களுக்கு விருந்துகளை கொடுக்க வேண்டும். பெண்கள் கஷ்டப்பட்டு தங்கள் இலக்கை அடைவதற்கு சில ஆண்கள் முதுகு எலும்பாகவும், பல ஆண்கள் நரிகளாகவும் மாறுகிறார்கள்.

கதையின் ஒழுக்கம்: இது ஒரு பெண்ணின் தவறு, ஆண் எப்போதும் ஒரு ஆண், எப்போதும் அவன் மட்டுமே சரியானவன்.. துரதிர்ஷ்டவசமாக சில பெண்களும் இதை ஆதரித்தனர்.. என்ன பரிதாபமான உலகம்?? என நடிகை ஸ்ரீரெட்டி பதிவு செய்துள்ளார்.

More News

'டிமாண்ட்டி காலனி 2' படத்தின் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை விட இருமடங்கு வசூலா?

அருள்நிதி நடித்த 'டிமாண்ட்டி காலனி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கல்கி' 2ஆம் பாகம் வெளியாக இத்தனை வருடங்கள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி..!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

அனைத்து பணிகளும் முடிந்தது.. 'கோட்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது தெரிந்தது.

தல அஜித்தை வைத்து பைக் ஓட்ட ஆசை... லைலா...

நடிகையாக கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனம் வென்றவர்.

புதுவையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 புரமோ படப்பிடிப்பா? அப்ப இந்த நடிகர் கமிட் ஆகிவிட்டாரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரமோ புதுவையில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக பிரபல நடிகர் தேதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.