ஒவ்வொரு நாளாக எண்ணியது முடிந்துவிட்டது.. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை அறிவித்த சீரியல் நடிகை..!

  • IndiaGlitz, [Friday,May 24 2024]

பிரபல சீரியல் நடிகை சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில் அவர் குழந்தை பிறக்கும் நாட்களை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்த நிலையில் நேற்று தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

’ராஜா ராணி’ உட்பட பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக் என்பதும் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அசோக் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவி அசோக் மீண்டும் கர்ப்பமான நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணியாக உள்ள புகைப்படங்கள், வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார்.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் டி-ஷர்ட்டில் எண்களை வரைந்து அதில் ஒவ்வொரு நாளும் எத்தனை நாள் கர்ப்பம் என்பதை குறிப்பிடும் வகையில் எண்ணிக் கொண்டிருந்த வீடியோவை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதேவி அசோக்கிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மகிழ்ச்சியுடன் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

15 லட்சமும் போச்சு.. பாஸ்போர்ட்டும் போச்சு.. புலம்பும் அஜித், விஜய் பட நடிகை..!

15 லட்சமும் போச்சு, பாஸ்போர்ட்டும் போச்சு என கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பல பிரபலங்களுடன் உடன் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை விருந்து? கைதாகும் பிரபல நடிகைகள்?

பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் போதை விருந்து நடந்ததாக காவல் துறையினர் கண்டுபிடித்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய 86 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும்

கோல்டன் விசா வாங்கியவுடன் மோடி திறந்து வைத்த கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்.. வைரல் புகைப்படம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நேற்று ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கிய நிலையில் இன்று அவர் பிரதமர் மோடி அபுதாபியில் திறந்து வைத்த இந்து கோயிலுக்கு

சூர்யா - கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா மற்றும் கார்த்தி இணையும் படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக  அந்தரத்தில் பறந்த அனுபவம்.. 'கோட்' பட நடிகையின் வைரல் பதிவு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் நடிக்கும் நடிகை முதல் முறையாக அந்தரத்தில் பறந்த அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில்