close
Choose your channels

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் குறித்து சிம்ரன் என்ன சொன்னார் தெரியுமா?

Tuesday, May 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெளியான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் குறித்து நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்து வைரலாகி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஒரு சிலர் கலவையான விமர்சனங்களை தந்து கொண்டிருந்தாலும் படம் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்றும் வசூலும் திருப்திகரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தை பார்த்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வரும் நிலையில் நடிகை சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தை பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

விக்னேஷ் சிவன் மீண்டும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். வழக்கத்துக்கு மாறான ஒரு கதையை சரியாக படமாக்க வேண்டும் என்றால் அது விக்னேஷ் சிவனால் மட்டுமே முடியும். ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படம் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிம்ரனுக்கு படக்குழுவினர் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment