சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா கணவர் இறக்கவில்லையா! இதுதான் காரணமா?.

  • IndiaGlitz, [Thursday,March 21 2024]


நாதஸ்வரம் தொலைக்காட்சித் தொடர் மூலமாக அறிமுகமாகி,பிறகு வாணி ராணி தொடரில் பிரபலமாகி,மக்கள் மனதில் இடம் பிடித்த சின்னத்திரை நடிகை சுருதி சண்முக பிரியா அவர்கள் தனது இண்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த சில உணர்வுப்பூர்வமான தகவல்களை காண்போம்.

தொலைக்காட்சி தொடர் நடிகை ஸ்ருதி சண்முக பிரியா கணவர் அரவிந்த் சேகர் தனது 30 வயதில் மாரடைப்பால் காலமானார்.பல வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் 2021ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டனர். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்,இந்த துறையில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.இவர்கள் இருவரும் ஜோடியாக பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனந்தமாக வாழ்ந்து வந்த தம்பதியினர் வாழ்வில் பெரும் துயரமாக ஸ்ருதி கணவர் மாரடைப்பால் இறந்தார்.இது குறித்து ஸ்ருதி , நமது ஆசைகள் கனவுகள் இது எல்லாமே நிறைவேற வேண்டும் என்றால்,அந்த ஆசையை நோக்கி நாம் விரைந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.அப்போது தான் நமது இலட்சியங்களை அடைய முடியுமென்று எனது கணவர் அடிக்கடி சொல்வார் .

நான் மறுபடியும் லட்சுமி என்ற தொடரில் வெற்றி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன்.என் கணவர் இப்போது என்னுடன் இல்லையென்றாலும் அவருடைய வருகையை நான் நன்றாகவே உணருகிறேன்.அவர் என்னுடன் பேசுவது எனக்கு தெரியும்.சிறு சிறு அசைவுகள் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ள முயற்சிப்பார். இதுவே எனது நம்பிக்கை.நான சன் தொலைக்காட்சியில் தொடரில் மீண்டும் உங்களை சந்திப்பேன்.என் கணவர் காட்டிய வழியிலேயே இப்போது வரை பயணித்து கொண்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

நடிகை சுருதி சண்முக பிரியா,தனது கணவருடன் உள்ள புகைப்படத்தை வெளியிடும்போது உண்மையிலேயே அதை பார்க்கும் நமக்கு ஏற்றுக்கொள்ள முடியாத துயரமாகவே உள்ளது.கடவுளுக்கும் கண் இல்லையா?

சண்முக பிரியா கணவர் மிகவும் இளமையான வயதிலேயே இறந்து போனார்.ஏன் இப்படி ஒரு துக்கத்தை அவரது வாழ்வில் கடவுள் கொடுக்க வேண்டும்.சண்முக பிரியாவின் கனவிற்காக அவரது கணவர் என்றும் துணை நிற்பார் என்று நம்புவோம்.இதை பற்றி மேலும் அறிய கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
 

More News

கதிர் ஆனந்துக்கு மீண்டும் சீட் ஏன்? தளபதியார் சொன்ன காரணமும் வேலூர் மக்களின் விசுவாசமும்..!

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தற்போது

ரஜினியை மட்டுமல்ல, இன்னொரு விவிஐபியையும் சந்திக்கும் விஜய்? தரமான சம்பவம் இருக்குது..!

தளபதி விஜய் தற்போது 'கோட்' படத்தின் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரத்தில் இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தனது 'வேட்டையன்' படத்தின்

செல்பிக்கு போட்டியாக பிரியாணி, பில்லியர்ட்ஸ்.. மாறி மாறி டிரெண்ட் ஆகும் அஜித், விஜய்..!

அஜித், விஜய் ஆகிய இரண்டு நடிகர்களும் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்கள் என்பதும் இருவரும் கடந்த பல ஆண்டுகளாக தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் அளவில் போட்டியாளர்களாக

திடீரென இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்த சன் டிவி சீரியல் நடிகை.. என்ன காரணம்?

சன் டிவி சீரியல் நடிகை திடீரென இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்'.. 'சச்சின்' பட இயக்குனரின் ஒரு இசைத்தொடர்..!

லைக்கா மியூசிக் நிறுவனம், 'நடுவுல கொஞ்சம் இசைய காணோம்' என்கிற தலைப்பில், 'சச்சின்' பட இயக்குனர் ஜான் மகேந்திரன் வழங்க ஒரு இசை தொடரை வெளியிட்டு இருக்கிறது.