குண்டர் சட்டத்தில் தமிழ் நடிகை கைது: பலரை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக புகார்

  • IndiaGlitz, [Saturday,March 03 2018]

'ஆடி போனால் ஆவணி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி. இவர் வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் செய்வதாக ஆசை காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் தற்போது நடிகை ஸ்ருதியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ஜெர்மனியில் சாப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவரிடம் ஆன்லைனில் அறிமுகமாகி அதன்பின்னர் அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.41 லட்சம் வரை நடிகை ஸ்ருதி மோசடி செய்துள்ளார். இவருக்கு இவரது தாயார் சித்ரா மற்றும் தந்தை பிரசன்னா வெங்கடேஷ் ஆகியோர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது, ஸ்ருதி பாலமுருகனை போல் பலரை ஏமாற்றி பணம் பறித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஸ்ருதி, அவரது தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. இதனையடுத்து நடிகை ஸ்ருதி மற்றும் அவரது தாய் சித்ரா, தந்தை பிரசன்ன வெங்கடேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மோசடியாக பெற்ற பணத்தை வைத்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ருதி குடும்பத்தினர் மியுட்சுவல் ஃபண்ட், தங்க, வைர நகைகள் உள்பட பல்வேறு வகைகளில் முதலீடு செய்துள்ளனர்.

More News

பிரபல சினிமா பைனான்சியர் மகள் கடத்தல்

பிரபல சினிமா பைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா போத்ரா கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற புகார் எழ போலீசார் அவர் கடத்தப்பட்டி

தளபதி விஜய் ரசிகர்கள் செய்த நலத்திட்ட உதவிகள்

இதுவரை தென்னிந்திய அளவில் தளபதியாக இருந்த நடிகர் விஜய், 'மெர்சல்' ரிலீசுக்கு பின்னர் இந்தியாவே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தும் அவர் காட்டும் எளிமை தான்

அமலாபாலின் மனித நேய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்து பணம் சம்பாதிப்பது மட்டுமின்றி தங்களுடைய ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு அவ்வபோது சில மனிதநேயமிக்க செயல்களை செய்வதை பார்த்து வருகிறோம்

ஸ்ரீதேவி ரசிகர்களுக்கு ஜான்வி கபூரின் உருக்கமான வேண்டுகோள்

நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரின் பிறந்த நாள் வரும் 7ஆம் தேதி வரவுள்ளது. இதனையடுத்து அவர் தனது தாய் ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு தனது சமூக வலைத்தளத்தின் மூலம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார்

கண்ணீரை வரவழைக்கும் ஜான்விகபூரின் உருக்கமான கடிதம்

இந்தியாவின் ஒரே லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கடந்த மாதம் 24ஆம் தேதி துபாயில் திடீரென மரணம் அடைந்தது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களையும் அவரது குடும்பத்தினர்களையும் நிலைகுலைய செய்தது.