ரஜினி, கமல் பட நாயகியின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக்: போலீஸில் புகார்

  • IndiaGlitz, [Wednesday,April 22 2020]

ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’, ‘சிவா’, கமல்ஹாசன் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக கடந்த 90களில் பிரபலமாக இருந்தவர் நடிகை ஷோபனா. நாட்டிய பேரொளி பத்மினியின் உறவினரான இவர் தற்போது தனது நடனப்பள்ளி மூலம் ஏராளமானவர்களுக்கு நடனம் கற்று தருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷோபனாவின் ஃபேஸ்புக் கணக்கு திடீரென மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள நடிகை ஷோபனா, இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் தனது ஃபேஸ்புக் கணக்கு மீட்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தள கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகை அனுபமா பரமேஸ்வரனின் ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் அவரது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்லைனில் ரிலீஸ் ஆகிறதா அனுஷ்கா படம்? தயாரிப்பு தரப்பு விளக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும்

கொரோனாவால் உலகம் முழுவதும் பசி, பட்டிணி இரட்டிப்பாகும்!!! ஐ.நா. சபை எச்சரிக்கை!!!

“கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளவில் பசி, பட்டிணியின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும்” என ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.

ஊரடங்கு நேரத்திலும் திகிலூட்டும் தங்கத்தின் விலை!!! ஏன் இந்த நிலைமை???

கொரோனா பாதிப்பினால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. யாரும் கடைகளில் தங்கத்தை விற்கவுமில்லை.

கொரோனாவைத் தடுக்கும் புரதம்: முதற்கட்ட ஆய்வில் வெற்றிப்பெற்றுள்ள எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்!!!

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சியில் உலக நாடுகள் வேகமாகப் பணியாற்றி வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தளபதி விஜய் கொடுத்த மிகப்பெரிய தொகை!

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோலிவுட்டின் பல பிரபல நடிகர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நிதியுதவி செய்த நிலையில் கோலிவுட்டின் மாஸ் நடிகரான தளபதி விஜய்யிடம்