குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை: தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை

குடும்பத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகை ஒருவர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் வினய் ஹீரோவாக நடித்த ’மிரட்டல்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் ஷர்மிளா மந்த்ரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் திடீரென விபத்துக்குள்ளானது என்பதும் அதில் நடிகை ஷர்மிளா மந்திரா படுகாயமடைந்து சிகிச்சை செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் விபத்தை அடுத்து தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் மட்டுமன்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடிகை ஷர்மிளா மந்த்ரா கூறும்போது நானும் எனது குடும்பத்தாரும் கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து பரிசோதனை செய்து கொண்டோம். அதில் எங்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

More News

எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு- பதற வைக்கும் மத்திய அரசின் சுற்றறிக்கை!!!

50-55 வயதைக் கடந்த மத்திய அரசு ஊழியர்கள் அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகும் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வு

நான் சுங்கக்கட்டணம் தரமாட்டேன்- நடுரோட்டில் நிர்வாணப்  போராட்டம் நடத்திய சாமியார்!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சுங்கச்சவாடி ஒன்றில் மாடாதிபதி ஒருவர் சுங்கக்கட்டணம் செலுத்தமாட்டேன் எனக் கூறியதோடு ஆடைகளைக் களைந்து

கர்நாடக அரசியல் கட்சியின் மூத்த தலைவர் கொரோனாவுக்கு பலி!!! அதிர்ச்சி தகவல்!!!

கர்நாடக மாநிலத்தின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாஜி கவுடா கொரோனாவால் உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது

செல்போன் இல்லாததால் உயிரிழந்த கல்லூரி மாணவி! உடன்கட்டை ஏறினாரா காதலர்?

ஆன்லைன் படிப்புக்காக செல்போன் இல்லாததால் உளுந்தூர்பேட்டை மாணவி ஒருவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது தெரிந்ததே

ரயில்வே ஊழியரை கட்டி வைத்து உதைத்த தமிழ் நடிகர்? காவல் நிலையத்தில் புகார்!

ரயில்வே ஊழியர் ஒருவரை தமிழ் நடிகர் ஒருவர் கட்டி வைத்து நாள் முழுவதும் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது