ஷகிலா - ஷீத்தல் மோதல்.. சமாதானம் செய்ய வந்த பெண் வழக்கறிஞர் மீது தாக்குதல்: போலீஸில் புகார்..!

  • IndiaGlitz, [Sunday,January 21 2024]

நடிகை ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் நடந்ததாகவும் இந்த மோதலை சமாதானம் செய்து வைக்க வந்த பெண் வழக்கறிஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவர்ச்சி வேடங்களில் நடித்த நடிகை ஷகிலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்களின் மத்தியில் பிரபலமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஷீத்தல் என்பவரை ஷகிலா வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார் என்பதும் இருவரும் சேர்ந்து பல பேட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு ஷீத்தல் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது ஷகிலாவை அடித்து கீழே தள்ளிவிட்டு ஷீத்தல் வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது

இது குறித்து ஷகிலா தனது வழக்கறிஞருடன் சென்று காவல்துறையில் புகார் அளித்த நிலையில் சமாதானப்படுத்த ஷீத்தல், அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வருகை தந்ததாக தெரிகிறது. ஆனால் சமாதான பேச்சு வார்த்தையின் போது திடீரென பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியதாகவும், இதில் சமாதானம் செய்ய வந்த பெண் வழக்கறிஞர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது தரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் முதல் வாய்ப்பு: புதிய படத்தில் கமிட்டான பிக்பாஸ் 7 போட்டியாளர்..!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் பார்வையாளர்களிடம் இருந்து பெற்றவர்கள் மாயா மற்றும் பூர்ணிமா என்று சொல்லலாம்.

பிக்பாஸ் சரவணன் விக்ரம் எடுத்த அதிர்ச்சி முடிவு..என்ன காரணம்?

 பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த சரவணன் விக்ரம் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் நடிப்பில் இருந்து விலகுவதாக

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் அடுத்த ஸ்பெஷல் .. புதிய சீரிஸ் அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு  ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.

சிறைக்கு அனுப்பிய நடிகை.. பழிவாங்க மகளின் புகைப்படத்தை மார்பிங் செய்த வாலிபர் கைது..!

பிரபல நடிகை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் வெளிவந்து அந்த நடிகையை பழி வாங்குவதற்காக

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய பிரமாண்டமான படம்.. ஐசரி கணேஷ் கூறிய ஆச்சரிய தகவல்..!

12 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய படம் ஒன்று பிரம்மாண்டமாக உருவாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்