திருமணம், குழந்தை பிறப்பிற்கு பின் ரீஎன்ட்ரி ஆகும் சாயிஷா.. யாருடன் முதல் படம்..!

  • IndiaGlitz, [Sunday,June 23 2024]

நடிகை சாயிஷா திருமணம் மற்றும் குழந்தை பிறப்பிற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் ’வனமகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாயிஷா, அதன் பிறகு ’கடைக்குட்டி சிங்கம்’ ’ஜூங்கா’ ’கஜினிகாந்த்’ ’காப்பான்’ ’டெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதனை அடுத்து அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு காரணமாக திரை உலகில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த சாயிஷா, கடந்தாண்டு வெளியான ’பத்து தல’ திரைப்படத்தில் மட்டும் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.

இந்த நிலையில் தற்போது குழந்தை ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால் மீண்டும் திரையில் ரீஎன்ட்ரியாக இருப்பதாகவும் அதற்காக கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக அவர் ஆர்யா நடிக்கும் படத்தில் ரீஎன்ட்ரி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.