என் பிள்ளைகள் காதலுக்கு பின் 2வது திருமணம்.. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகரின் முன்னாள் மனைவி..

  • IndiaGlitz, [Saturday,June 08 2024]

சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிரபல நடிகரின் முன்னாள் மனைவி என்னுடைய குழந்தைகளின் காதலுக்கு பின்னர் நான் இரண்டாம் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக பேட்டியில் கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவன் கல்யாண் தன்னுடன் நடித்த ரேணுதேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னரே இந்த தம்பதிக்கு ஒரு மகன் பிறந்த நிலையில் திருமணத்திற்கு பின் ஒரு மகள் பிறந்தார் என்பதும் சில வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பவன் கல்யாண் மற்றும் ரேணுதேசாய் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

விவாகரத்துக்கு பின் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வரும் ரேணு தேசாய் குழந்தைகளுக்காகவே தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தார். இடையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து அதன் பிறகு குழந்தைகளின் எதிர்காலம் கருதி அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துவிட்டார்.

இந்த நிலையில் தற்போது குழந்தைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆகியுள்ளனர் என்றும் கல்லூரிக்கு சென்று அவர்களுக்கு என்று ஒரு காதல் ஏற்பட்ட பின்னர் நான் மறுமணம் செய்து கொள்வேன் என்றும் அதுவரை இன்னும் சில வருடங்கள் காத்திருப்பேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் குழந்தைகளும் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார்கள் என்றும் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவரை தாராளமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றும் எனவே இரண்டு அல்லது மூன்று வருடம் கழித்து நான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

More News

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பு.. வைரல் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பு போட்டோ ஷூட் புகைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் தற்போது மீண்டும் இடுப்பு மடிப்புடன் கூடிய வீடியோ

'அன்பான மகள் வந்ததால் அம்பானி நானாகிறேன்'.. விஜய்சேதுபதிக்கு புகழாரம் சூட்டிய வைரமுத்து..!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் அந்த பாடலை எழுதிய வைரமுத்து

'காஞ்சனா 4' படத்தில் இந்த பிரபல நடிகையா? ராகவா லாரன்ஸின் கச்சிதமான தேர்வு..!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நான்காம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது

மாநில அளவில் தவெக தலைவர் விஜய் நடத்தும் ஆலோசனை கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தளபதி விஜய் மாநில அளவில் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த இருப்பதை அடுத்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தென்னிந்திய பிரபலம் - தொழிலதிபர் காலமானார்.. ரஜினிகாந்த் உட்பட பலர் இரங்கல்..!

தென்னிந்திய அளவில் பிரபலமான தொழிலதிபர் ராமோஜிராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜிராவ் காலமானதையடுத்து ரஜினிகாந்த், சிரஞ்சீவி, குஷ்பு உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.