சஞ்சனா கல்ராணியுடன் லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருந்தது யார்? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,September 10 2020]

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணியுடன் பிரபல டாக்டர் ஒருவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

பிரபல கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்த போலீசார் அவருடைய வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது சஞ்சனா பெயரில் உள்ள வீடு மற்றும் அவருடைய பிஎம்டபிள்யூ கார் ஆகியவை சஞ்சனாவின் வருமானத்தில் வாங்கப்படவில்லை என்றும் அவரது நண்பர் டாக்டர் ஆஷிஸ் என்பவர் வாங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்தது. இதனை விசாரணையில் ஒப்புக் கொண்ட சஞ்சனா, அவர் தனது நண்பர் என்றும் அடிக்கடி தனது வீட்டில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்வார் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து சஞ்சனாவும், டாக்டர் ஆஷிஸ் என்பவரும் திருமணம் செய்யாமலேயே லிவ்இன் ரிலேஷன்ஷிப் இருந்ததாக கூறப்படுகிறது

மேலும் சஞ்சனா தான் கைது செய்யப்படுவோம் என்று ஏற்கனவே யூகித்துக் கொண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மது அருந்தாமல் இருந்துள்ளதாகவும் அக்கம்பக்கத்தினரிடம் தன்னைப் பற்றி போலீசார் விசாரித்தால் எதுவும் தவறாக கூறிவிட வேண்டாம் என கெஞ்சி கேட்டு கொண்டுளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

தற்போது மகளிர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சஞ்சனாவை 5 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் போதைப்பொருள் அவதாரத்தில் 24 முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக ராகினி மற்றும் சஞ்சனா வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

More News

வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்திய மர்மநபர்கள்… இளம்பெண் மாயமான அவலம்!!!

பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறி மர்மநபர்கள் ஆம்புலஸில் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைனில் படிக்க வசதி இல்ல… பெற்றோர்களே பள்ளி மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் அவலம்!!!

கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் பகுதியில் ஆன்லைனில் படிக்க வசதி இல்லாத காரணத்தால் பெற்றோர்களே பள்ளி மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் அவலம் நடைபெற்று

ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; தட்டித் தூக்குவாரா தல தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாகக் கருதப்படுவது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.

ஐந்து மொழிகளில் ரிலீஸாகும் விஜய்சேதுபதியின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய நடிகராகவும் பாலிவுட் நடிகராகவும் மாறிவிட்டார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே 'சயிர நரசிம்ம ரெட்டி உள்ப

சூர்யா-கார்த்தி பட நாயகியின் தியான புகைப்படம் வைரல்!

அருண் விஜய் நடித்த 'தடையற தாக்க' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ரகுல் பிரீத்திசிங் அதன் பின்னர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' என்ற படத்தில் நடித்தார்.