பிக்பாஸ் தர்ஷன் மீது பிரபல நடிகை போலீஸில் புகார்

பிக்பாஸ் தர்ஷன் தன்னை திருமணம் செய்வதாக செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக பிரபல நடிகை சனம் ஷெட்டி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷன், ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தர்ஷன் தான் இந்த சீசனின் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கடைசி நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டு, முகின் டைட்டில் பட்டம் பெற்றார்

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்து விட்டு பின்னர் திருமணத்தை நிறுத்தி விட்டதாக தர்ஷன் மீது நடிகை சனம் ஷெட்டி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

ஏற்கனவே தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது தனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக கூறியிருந்தார் என்பதும், பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது சனம்ஷெட்டி, ‘தர்ஷன் தான் தன்னுடைய காதலர் என்று பேட்டி அளித்தும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று திடீரென சென்னை கூடுதல் ஆணையர் அவர்களிடம் சனம்ஷெட்டி தர்ஷன் மீது புகார் அளித்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நிச்சயதார்த்தம் நடந்து ஜூன் மாதம் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் சினிமா நடிகர்களையும் தன்னையும் இணைத்து தவறாகக் கூறி திருமணத்தை நிறுத்தினார் தர்ஷன். இதனால் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. எனது குடும்பமே மன உளைச்சலுக்குள்ளானது. திருமணத்தை ஏன் நிறுத்தினாய் என்று தர்ஷனிடம் ஏன் எனக் கேட்டதற்கு என்னுடைய வழியில் குறுக்கே வரக்கூடாது. அப்படி வந்தால் என்னுடைய ரசிகர்கள் சமூகவலைதளத்தில் உன்னை தவறாக சித்தரிப்பார்கள் என்று என்னை மிரட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவரை அனுப்ப விண்ணப்பம் அனுப்பியது முதல் அவர் புகழ்பெற்றது வரை எனக்கு பங்கு உண்டு. அவர் தேவைக்காக ரூ.15 லட்சம் வரை செலவு செய்திருக்கிறேன். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு திருமணத்தை நிறுத்திவிட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

More News

விக்ரமின் 'கோப்ரா' படத்தில் இணைந்த மலையாள இளம் நடிகர்

சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'விக்ரம் 58' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

கொரோனா வைரஸ் பரவல் : சர்வதேச அவசர நிலை பிரகடனம் – WHO அறிவிப்பு

இந்தியா உட்பட கொரோனா வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவியுள்ளது. இதனை அடுத்து உலகச் சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. 

இதெல்லாம் பக்தியாலும், பயத்தாலும் வருவது: கமல்ஹாசன் டுவீட்

பிரபல கர்நாடக இசைக்கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதிய புத்தகம் ஒன்று பிப்ரவரி 2ம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென இந்த புத்தக வெளியீட்டிற்கு அனுமதி தந்த

அமலாபாலை அடுத்து ஆடையின்றி நடித்த பிக்பாஸ் புகழ் நடிகை

பிரபல நடிகை அமலாபால் சமீபத்தில் வெளியான 'ஆடை' என்ற படத்தில் ஆடையின்றி நடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில்

CAA-வை கிழித்து எறிந்துவிட்டு அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனத்தை பின்பற்றுவோம்..! பாஜக எம்.எல்.ஏ.

நாட்டை எப்போதுமே மதத்தின் வழியில் பிரிக்கக்கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிட்டு, அனைத்து மக்களும் ஒன்றாக அம்பேத்கர் அமைத்துக் கொடுத்த அரசியல் சாசனத்தைப் பின்பற்ற வேண்டும்