விமான விபத்தில் உயிர் தப்பிய பிரபல நடிகை

  • IndiaGlitz, [Thursday,March 29 2018]

கடந்த  1990கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரோஜா. ரஜினியுடன் உழைப்பாளி, வீரா போன்ற படங்களிலும் மற்றும் பால் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடிகை ரோஜா  ஜோடியாக நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவாகவும் உள்ளார்.

இந்த நிலையில் நேற்றிரவு திருப்பதியில் இருந்து ஐதராபாத்திற்கு இண்டிகோ விமானத்தில் ரோஜா உள்பட பயணிகள் பலர் வந்து கொண்டிருந்தனர். அப்போது விமானம் ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென விமானத்தின் டயர் வெடித்து டயர் இருந்த இடத்தில் நெருப்பு தோன்றியது

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் விமானி திறமையாக விமானத்தை தரையிறக்கினார். இந்த நிலையில் விமான நிலையத்தில் இருந்த தீயணைப்பு துறையினர் டயர் பகுதியில் ஏற்பட்ட தீயை உடனே அணைத்து ரோஜா உள்பட அனைத்து பயணிகளையும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கினர். இதனையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கவேண்டிய ஒருசில விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

More News

தோனியும் அஸ்வினும்: ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்யும் காணொளி

தல தோனி ஒரு மேட்ச் ஃபினிஷர் என்பதும் தோல்வி அடையும் நிலையில் இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் பதட்டமின்றி விளையாடி அணியை வெற்றி பாதைக்கு பலமுறை கொண்டு சென்றுள்ளார்

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலனும் உடந்தை

தர்மபுரி அருகே ரூ.55 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக கட்டிய கணவனை கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் குறித்து ரஜினியின் அறிவிப்பு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் விடுத்த 6 வார கால இன்று முடிவடையும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே நியாயமான தீர்வாக இருக்க முடியும் என்று

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட வார்னர்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஒரே நேரத்தில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் இளம் நடிகை

'பிரேமம்' படம் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தின் வெற்றியால் தனது டாக்டர் தொழிலை கூட கைவிட்டு முழுநேர நடிகையாகிவிட்டார்.